முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமுல்லைவாயலில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. பல லட்சம் மோசடி

புதன்கிழமை, 4 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மே.4 - சென்னை புறநகர் திருமுல்லைவாயல் பகுதியில் ஏல சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை புறநகர் கள்ளிக்குப்பம், அண்ணா 2 வது தெருவை சேர்ந்த பொன்னம்பலம் என்பவரின் மனைவி உஷாராணி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் ஏலச்சீட்டு நடத்தி வந்த அம்பத்தூரை சேர்நத கிருஷ்ணன் என்பவரது மனைவி மாரி என்பவரிடம் ரூ. ஒரு லட்சம் சீட்டு மற்றும் இரண்டு ரூ. 50 ஆயிரம் சீட்டுகளுக்காக கடந்த 15 மாதங்களாக பணம் கட்டி வந்தேன். சீட்டுகள் முடிந்த பின்னரும் மொத்த பணம் ரூ. 3 லட்சத்து 71 ஆயிரத்து 800 ஐ மாரி தனக்கு கொடுக்காமல் ஏமாற்றும் நோக்கத்தோடு தலைமறைவாகி விட்டார். இதே போல் ஏராளமானோருக்கு சீட்டு பணம் கொடுக்காமல் பல லட்சம் ரூபாயை அவர் மோசடி செய்துள்ளார் என்று கூறியிருந்தார். 

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி மாரியை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து மாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்