எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்,மே.5 - பாகிஸ்தானுக்குள் அனுமதியின்றி சென்று அங்கு தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றதற்காக அந்நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை என்று அமெரிக்க நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரம், ராணுவ தலைமையகமான பெண்டகன் உள்ளிட்ட இடங்களை ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா இயக்கத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கினார்கள். இந்த தீவிரவாத தாக்குதலில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியானார்கள். இவர்களில் நூற்றுக்கணக்கான இந்தியர்களும் அடங்குவர். ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல்கொய்தா இயக்கத்தின் இந்த தாக்குதல் அமெரிக்காவை மட்டுமல்ல, உலகையே நிலைகுலைய வைத்தது.
அன்று முதல் சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை எப்படியாவது உயிரோடு பிடிப்பது, அல்லது தீர்த்துக்கட்டுவது என்ற முனைப்போடு காரியத்தில் இறங்கியது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த முயற்சி பல ஆண்டுகள் நீடித்தது. ஆனால் பாகிஸ்தானோ பின்லேடன் தனது நாட்டில் இல்லவே இல்லை என்று ஒரேயடியாக மறுத்து வந்தது. பின்லேடன் ஆப்கானிஸ்தானில் மலைக் குன்றுகளில் தங்கியிருப்பான் என்பது போல பாகிஸ்தான் பேசி வந்தது.
இந்த நிலையில் பயங்கரவாதி பின்லேடன் இஸ்லாமாபாத் அருகே ஒரு சொகுசு பங்களாவில் பதுங்கியிருப்பதை அமெரிக்க உளவுத் துறை கண்டுபிடித்தது. ஆனால் அந்த தகவலை பாகிஸ்தானிடம் சொல்லவில்லை. அப்படி சொன்னால் பின்லேடனுக்கு தகவல் போய் விடும். அவன் தப்பி விடுவான் என்று கருதிய அமெரிக்கா நேரடியாக களத்தில் குதித்தது. 2 தினங்களுக்கு முன் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்து பின்லேடன் தங்கியிருந்த சொகுசு பங்களாவில் குண்டு மழை பொழிந்தன.
அப்போது இரு தரப்பினருக்கும் கடும் சண்டை மூண்டது. இந்த சண்டை சுமார் 40 நிமிடம் நீடித்தது. அப்போது தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக பயங்கரவாதி பின்லேடன் தனது மனைவியை கேடயமாக பயன்படுத்தியதாக கூட தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியில் இந்த சண்டையில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டான். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவனது கோர முகம் பல்வேறு மீடியாக்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் வெளிவந்தன.
பின்லேடன் கதையை வெற்றிகரமாக முடித்து விட்டதாக அமெரிக்கா பெருமிதத்தோடு கூறி வருகிறது. ஆனால் இதிலும் சில குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பின்லேடனை அமெரிக்கா உயிரோடு பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவனது மெய்க்காப்பாளர்களே அவனை சுட்டுக் கொன்றதாக கூட மற்றொரு தகவல் கூறுகிறது. இதில் எது உண்மை என்பது புரியவில்லை. ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. பின்லேடன் கொல்லப்பட்டு விட்டான் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
அவனது உடல் இறுதிச் சடங்குகளுக்கு பிறகு கடலில் வீசப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இத்தனையும் பாகிஸ்தானுக்கு தெரியாமலேயே நடந்து முடிந்துள்ளது. இதை பாகிஸ்தானும் ஊர்ஜிதப்படுத்தி உள்ளது. இப்படி பாகிஸ்தானுக்குள் அனுமதி இல்லாமல் சென்று காரியத்தை முடித்ததற்காக அந்நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க நிர்வாகம் உறுதிபட கூறியுள்ளது. இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்நாட்டின் செய்தி துறை அமைச்சர் கூறுகையில்,
பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். காரணம், பின்லேடன்தான் தங்களின் முதல் எதிரி. அவன் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்தவன். அவன் ஒன்றும் இஸ்லாமிய மத தலைவர் அல்ல, ஒரு தீவிரவாதி. அவனை கொன்றதில் தப்பில்லை. எனவே பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமெரிக்க அமைச்சர் கூறினார். மேலும் பின்லேடன் கொல்லப்பட்டதை அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்களும், இதர நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களும் கூட வரவேற்கிறார்கள். தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதை இந்த உலகமே வரவேற்கிறது என்றும் அந்த அமைச்சர் தெரிவித்தார். ஆகவே பாகிஸ்தானுக்குள் அனுமதியின்றி சென்றதற்காக மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.