முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகனுக்காக 200 தேங்காய்கள் உடைத்து ரோஜா பிரார்த்தனை

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

நகரி, ஜூலை. 7 - ஜெகன் மோகன் ரெட்டிக்காக அவரது கட்சியின் நகரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ரோஜா 200 தேங்காய்களை உடைத்து பிரார்த்தனை நடத்தினார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில், வரும் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிடுகிறார் ரோஜா. சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா மரோபிரஜா பிரஸ்தானம் என்ற பாதயாத்திரையை மேற்கொண்டார். நேற்று முன்தினம் வரை அவர் 200 நாள் பாதயாத்திரை சென்றுள்ளார். மொத்தம் 2664 கி.மீ. தூரம் நடந்து பொது மக்கள் குறைகளை கேட்டறிந்துள்ளார். ஷர்மிளா 200 நாள் பாதயாத்திரை சென்றதை தொடர்ந்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகார பிரதிநிதியும் நடிகையுமான ரோஜா நகரியில் உள்ள தேசம்மா கோவில் எனப்படும் சிவசக்தி அம்மன் கோவிலில் 200 தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்தார். கோவிலில் சிறப்பு பூஜையும் நடத்தினார். 

பின்னர் நடிகை ரோஜா கூறுகையில், ராஜசேகர ரெட்டி 1470 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். அவரது மகள் ஷர்மிளா தந்தையை மிஞ்சி 2664 கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்றுள்ளார். அடுத்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை பிடிப்பார். ஷர்மிளா பாத யாத்திரையின் போது பொது மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டதால் ஜெகன் மோகன் ரெட்டியால் மக்களுக்கு நல்லாட்சியை தரமுடியும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்