எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மே.5 - சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதை தொடர்ந்து தற்போது அமலாக்கப் பிரிவு இயக்குனரகமும் சம்மன் அனுப்பியதை அடுத்து மிகுந்த சோகத்துடன் கனிமொழி நேற்று டெல்லிக்கு பயணமானார். அவருடன் தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனும் மற்றும் ஏ.கே.எஸ். விஜயனும் உடன் சென்றனர். நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கி முன்னாள் அமைச்சர் ராசா கைதாகி தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த்த பெகுரா, சாஹித் உஸ்மான் பல்வா ஆகியோரும் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு 5 முக்கிய நிறுவன அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் 2 ம் தேதி இந்த வழக்கில் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிக்கை 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக இருந்தது. அதன் பிறகு ஏப்ரல் இறுதிவாக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் இருந்து சினியுக் நிறுவனம் வழியாக கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக கனிமொழியிடமும், தயாளு அம்மாளிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. காரணம், கனிமொழிக்கு கலைஞர் டி.வியில் 20 சதவீத பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும் டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. அதனால்தான் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரத்தில் கனிமொழியிடமும், தயாளுவிடமும் சி.பி.ஐ விசாரணை நடத்தியது.
இந்த விசாரணைக்கு பிறகே கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தயாளுவின் பெயர் சேர்க்கப்படவில்லை. கனிமொழி ஒரு கூட்டு சதியாளர் என்று அந்த குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே சி.பி.ஐ கனிமொழிக்கு சம்மன் அனுப்பி 6 ம் தேதி ஆஜராக வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தது. பிறகு தற்போது அமலாக்கப் பிரிவு இயக்குனரகமும் கனிமொழிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இப்படியாக சம்மன் மேல் சம்மன் தனக்கு வந்ததால் கனிமொழி சோகத்துடன் காணப்பட்டார்.
அந்த சோகத்துடன் நேற்று அவர் டெல்லிக்கு பயணமானார். கிங்பிஷர் விமானத்தில் காலை 6.45 மணிக்கு அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றதாக தகவல்கள் கூறுகின்றன. அவருடன் அவரது கணவரும், மகனும் புறப்பட்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தி.மு.க எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் உடன் புறப்பட்டு சென்றனர். முன்னதாக இந்த சம்மன் விவகாரத்தை அடுத்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களோடு முதல்வர் கருணாநிதி, தனது சி.ஐ.டி. காலனி இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, பொன்முடி, ஏ.வ. வேலு உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது பல ஆண்டுகளாக நம்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தங்களை கைவிட்டு விட்டதாக கூட்டத்தில் பேசியவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அமலாக்கப்பிரிவும் சம்மன் அனுப்பியிருப்பது தி.மு.க. தலைவர்களை அப்செட்டாக வைத்துள்ளது. அவர்கள் கலங்கிப் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கலக்கமான சூழ்நிலையில்தான் முதல்வரின் மகள் கனிமொழி சோகத்துடன் டெல்லிக்கு பறந்திருக்கிறார். எந்த நேரத்திலும் கனிமொழி கைது செய்யப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.