முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.கடற் படையினர் 13 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

மண்டபம்,ஜூலை.8 - இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் மீண்டும் நேற்று முன்தினம் நடந்துள்ளது. மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 படகுகளில் இருந்த 13 மீனவர்களை சிறைபிடித்து சென்றதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ாமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து 6-ந் தேதி பிற்பகலில் 521 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதில் பரமக்குடி அரியனேந்தல் பகுதியை சேர்ந்த ராமு மகன் முத்திருளாண்டி, பாம்பன் தெற்குவாடியை சேர்ந்த பெனிச்சர் என்பவரின் மகன் லங்க்ஸ்டன், தங்கச்சிசமடம் சூசையப்பர் பட்டிணத்தை சேர்ந்த ஜெபமாலை மார்ட்டின் மகன் சூசை ஆகிய 3 பேரின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த படகில் நாகாச்சி கருப்பையா மகன் பஞ்சவர்ணம்(வயது55), பெருங்குளம் முத்துராக்கு மகன் முத்துச்சாமி(60), முனியாண்டி மகன் கணபதி(50), மண்டபம் வெள்ளையன் மகன் முனியாண்டி(55), முனியாண்டி மகன் மணிகண்ட்ஸ்வரன்(23), மண்டபம் கருப்பையா மகன் நாகசாமி(30), அக்பர்(35), தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டிணம் அடிமை மகன் ஜபருல்லா(28), அவரின் தம்பி ஜென்சன், பெருங்குளத்தை சேர்ந்த கருப்பையான மகன் ராஜு(50), மண்டபம் மீனவர்காலனி ஜெபஸ்டியான்(26), ஜேம்ஸ் மகன் லிவிங்ஸ்டன் உள்பட 13 பேரை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த ராமமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலால் கடல் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து விடும் அபாய நிலையின் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இதுபோன்ற மீனவர்களை சிறைபிடித்து சென்று வருவதால் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago