முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வாரிய பணியாளர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.9 - மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த மின்வாரிய மஸ்தூர் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக  முதலமைச்சர்  ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

          பெரம்பலூர்  மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், அரும்பாவூர்  பிரிவில் மஸ்தூராக பணி புரிந்து வந்த பரமசிவம்    27.6.2013 அன்று அரும்பாவூர், வள்ளலார் தெருவில் மின்தடையை சரி செய்ய  மின்கம்பத்தில் ஏறி மின்பாதை மாற்றும் பணியை மேற்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கீழுே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்  என்ற செய்தியை அறிந்து நான் மிகவும்  துயரம் அடைந்தேன். 

தமிழ்நாடு மின்சார வாரிய மஸ்தூர் பணியாளர்  பரமசிவம்  அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

          மின்பாதை மாற்றும்  பணியை மேற்கொண்டிருந்த  போது  கீழே விழுந்து  காலமான தமிழ்நாடு மின்சார வாரிய மஸ்தூர் பணியாளர் பரமசிவனின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து   மூன்று  லட்சம் ரூபாய் வழங்க  நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்