முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாகூரில் குண்டுவெடிப்பு: 5 பேர் உடல்சிதறி பலி

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

லாகூர், ஜூலை. 9 - பாகிஸ்தானின் லாகூரில் உணவகங்கள் நிறைந்த பழைய அனார்கலி தெருவில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இங்குள்ள பல உணவகங்களில் பலர் குடும்பத்துடன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது ஒரு உணவகத்துக்கு வெளியே சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயமடைந்தனர். இது பற்றி லாகூர் போலீஸ் தலைமை அதிகாரி சவுத்ரி ஷபிக் கூறுகையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. பொகாரா உணவகத்துக்கு வெளியே நடந்த இந்த குண்டு வெடிப்பில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில கார்களும், பிற வாகனங்களும் சேதமடைந்தன என்றார். தகவலறிந்து அங்கு வந்த போலீசாரும், அவசர கால மீட்பு சேவை குழுவினரும் குண்டு வெடிப்பில் காயமடைந்தோரை அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்