எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.11 - கர்நாடக அரசின் பெயரை சொல்லி வங்கிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிய மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர் கொல்கத்தாவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பின்னர் அவர் சென்னை கொண்டு வரப்பட்டார்.
பெங்களுாரை சேர்ந்த இவர் கர்நாடக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் செய்யபடுவதாகவும் அதற்காக பணம் தேவைப்படுகிறது என்றும் மிகவும் துணிச்சலாக அச்சு அசலான போலி ஆவணங்களையும் தயாரித்து ஏமாற்றியதும் அம்பலமானது.
சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் இதே பாணியில் போலியான ஆவணங்களை கொடுத்து சுகாஷ் ரூ.19 கோடி கடன் வாங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த வங்கியின் துணை பொதுச்செயலாளர் நல்லசிவம் கொடுத்த புகாரில் வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார். விதிமுறைகளை மீறி சுகாஷுக்கு கடன் கொடுத்த குற்றத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரோடு நடிகை லீனாவும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் சுகாஷையும் அவரது காதலி மரியா லீனா பாலையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். 2 பேரும் டெல்லியில் பதேபுர்ை பகுதியில் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது சென்னை போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.
அப்போது மயிரிழையில் சுகாஷ் தப்பி சென்றார். லீனாவை மட்டும் போலீசார் கைது செய்து சென்னை கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் சுகாஷ், நடிகையாக்குவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார். ஆனால் சொகுசு வாழ்க்கை காரணமாக அவரிடமிருந்து என்னால் மீள முடியவில்லை என்று கூறினார்.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட லீனாவுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் சிறையிலேயே இருக்கிறார்.
இதற்கிடையே சுகாஷ் டெல்லியிலும் கைவரிசை காட்டியிருப்பதை அம்மாநில போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் சுகாஷை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்காளத்தில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட சுகாசை அழைத்து வருவதற்காக சென்னையில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லி சென்றனர்.
நேற்று காலையில் ரெயில் மூலம் சுகாஷ் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அவரை படம் பிடிப்பதற்காக ஏராளமான போட்டோ கிராபர்கள் காத்திருந்தனர். சுகாஷை படம் பிடிப்பதற்காக அவர்கள் முண்டியடித்தனர். அப்போது படம் எடுப்பதற்கு ஏதுவாக சுகாஷ் போஸ் கொடுத்தார்.
பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்ட சுகாஷ்டம் மத்திய குற்றப் பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகை லீனா மரியா பாலுடன் காதல் மலர்ந்தது எப்படி? அவர் உங்கள் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் (நடிகையாக்குவதாக மோசடி) உண்மையா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு சுகாசிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதே நேரத்தில் சுகாஷ் அரங்கேற்றிய மோசடி வித்தைகள் குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கர்நாடக அரசின் பெயரை சொல்லி மோசடி செய்ததன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அது தொடர்பான போலி ஆவணங்களை தயாரிப்பதற்கு உதவியவர்கள் யார்? என்பது போன்ற கோணத்திலும் சுகாசிடம் விசாரணை நடத்தப்பட்டது.
போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் சுகாஷ் பொறுமையாக பதில் அளித்தார். இதனை வாக்கு மூலமாக போலீசார், பதிவு செய்தனர். சுகாஷ் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
எனது சொந்த ஊர் பெங்களூர். அப்பா பெயர் சந்திரசேகர். அம்மா பெயர் மாலா. பெங்களுார் நாகா பாவி கிராமத்தில் சிவா அபார்ட்மெண்ட்டில் வசித்து வந்தேன். பெங்களூர் கிரிஸ்ட் காலேஜில் படித்த நான் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விட்டேன்.
எனது பெற்றோர் ரப்பர் கம்பெனி நடத்தி வருகிறார்கள். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், சினிமா தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. இதற்காக மோசடியில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க தொடங்கினேன்.
லேப்-டாப்பில் என்னைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொண்டேன். ரூ.50 லட்சத்துக்கு பி.எம்.டபிள்யு ைஆடம்பர கார் வாங்க டி.டி. அனுப்பியது போலவும், பணத்தை கம்பெனிகாரர்கள் பெற்றுக் கொண்டது போலவும் லேப்-டாப்பில் பதிவு செய்து அதை மற்றவர்களிடம் காட்டினேன். நான் பெரிய பணக்காரன் என்று மற்றவர்களை நம்ப வைத்தேன்.
லேப்-டாப்பில் பெங்களூர் மாடல் அழகிகளின் போட்டோக்களை பதிவு செய்தேன். அவற்றை மற்றவர்களிடம் காட்டி சினிமா தயாரிப்பாளர் என்றும் என்னிடம் சான்ஸ் கேட்டு வந்த அழகிகள் என்றும் சொல்வேன்.
பெங்களூரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயகுமார் ஓய்வு பெற்றார். அவரது பெயரை பயன்படுத்திக் கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வந்தேன். சிகப்பு விளக்கு பொருத்திய காரில் அதிகாரி போல் உலா வந்தேன்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழில் அதிபரின் வெல்டிங் மிஷின் உற்பத்தி நிறுவனத்துக்கு கர்நாடக அரசிடம் இருந்து ரூ.120 கோடி ஆர்டர் பெற்றுத் தருவதாக அம்பத்தூர் கனரா வங்கி கிளையில் ரூ.19.75 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டோம்.
கர்நாடக அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ். என்று சொல்லி இந்த மோடியில் ்டுபட்டேன். இதற்காக அவரது போலியாக இ.மெயில் கடிதம் தயாரித்தேன். டெலிபோனிலும் அவரைப் போல பேசி நடித்தேன்.
இதே போல் சேலையூரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்ற டெக்ஸ்டைல்ஸ் அதிபரிடம் கர்நாடக அரசிடம் சீருடை ஆர்டர் பெற்றுத் தருவதாக நானும், லீனா மரியாபாலும் சேர்ந்து ரூ.1 லட்சம் மோசடி செய்தோம். அவரிடமும் நான் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ். என்று சொல்லி ஏமாற்றினேன்.
எனது செயலாளர் என்று சொல்லி லீனா மரியாபால் சக்கரவர்த்தியிடம் பேசினார். சொன்னபடி ஆர்டர் கிடைக்காததால் சக்கர வர்த்தி நேரடியாக கர்நாடக அரசிடம் விசாரித்தபோது ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ். என்று யாரும் இல்லை என்றும் சுகாஷ் என்பவர் தான் ஏமாற்றியுள்ளார் என்றும் கூறி இருக்கிறார்கள். இதனால் நானும் லீனாவும் தலைமறைவாகி விட்டோம்.
கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவருக்கு பெல்லாரியில் இருந்து சுரங்க ஏலம் எடுத்து தருவதாக ரூ.3 லட்சம் ஏமாற்றினேன். கார் வாங்கித் தருவதாக பிரேம் என்பவரிடம் மோசடி செய்தேன்.
சென்னையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரிடம் கார் வாங்கித் தருவதாக ரூ.2 லட்சமும், அனுபமாராவ் என்பவரிடம் ரூ.4.5 லட்சமும் பெற்றேன். மதுரையைச் சேர்ந்த ஒரு தியேட்டர் அதிபரிடமும் ரூ.10 ஆயிரம் ஏமாற்றினேன். அப்போது ஊமச்சிக்குளம் போலீசில் சிக்கினேன்.
சென்னை சேத்துப்பட்டில் அழகு நிலைய உரிமையாளரிடம் விலை உயர்ந்த கார் வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் பெற்றேன். இதுபோல் தமிழ்நாட்டில் 6 மோசடிகளில் ்டுபட்டேன்.
நான் பேஸ்புக்கில் பல்வேறு நபர்களுடன் பேசுவது வழக்கம். லீனா மரியாபாலும் பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார். அவரை சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி பழகினேன். அவரை ஏமாற்றினாலும் அவரை காதலித்தேன். கையில் லீனா என பச்சை குத்திக்கொண்டேன்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், பிரெஞ்ச் என 8 மொழிகள் தெரியும். மோசடி பணத்தில் எனக்கு பாதுகாப்புக்கு மட்டும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் 10 மெய்க்காப்பாளர்கள் வைத்துக் கொண்டேன். இதற்காக மாதம் ரூ. 1 1/2 லட்சம் செலவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.