எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இட்டாநகர்,மே.5 - கடந்த சனிக்கிழமையன்று ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்ற அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டுவின் கதி என்னவாயிற்று என்பது பற்றி இதுவரை தெரியாமலேயே இருந்து வந்தது. நேற்று கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு பிறகு அவர் விபத்தில் சிக்கி பலியானது ஊர்ஜிதமாகி இருக்கிறது. முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் லபோத்தாங் என்ற பகுதியில் விபத்துக்குள்ளானதில் முதல்வரின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பது ஒருவழியாக கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற மேலும் 4 பேரும் இந்த விபத்தில் சிக்கி உடல் சிதைந்து பலியானார்கள். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை போல டோர்ஜிகாண்டுவும் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது அதிர்ச்சி அலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது.
விபத்துக்கள் என்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகி விட்டது. நடந்து சென்றாலும் விபத்து ஏற்படுகிறது. சரி, பஸ்சில் செல்வோம் என்று பஸ்சில் பயணம் செய்தாலும் தறிகெட்டு செல்லும் டிரைவர்களால் விபத்து ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின்றன. ரயிலில் பயணம் செய்வோமே என்று நினைத்து பயணம் செய்தால் அந்த ரயிலும் கூட விபத்தில் சிக்கி விடுகிறது. இதனால் வசதி உள்ளவர்கள் விமானத்தில் போகிறார்கள். ஆனால் விமானங்களும் நடுவானில் மோதிக் கொள்கின்றன. அல்லது ஏதேனும் ஒரு வகையில் விபத்தில் சிக்கி விடுகின்றன. சில விமானங்கள் தரையிறங்கும் நேரத்தில் கூட விபத்துக்கு உள்ளாகி விடுகின்றன. கர்நாடக மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் ஒரு விமானம் தறிகெட்டு ஓடி மலைப்பகுதிக்குள் விழுந்து கிட்டத்தட்ட 160 பேர் அப்போது பலியானார்கள். இப்படி எல்லா மார்க்கத்திலும் விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
சில மாதங்களுக்கு முன் ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி நலமுல்லா வனப் பகுதியில் விழுந்து சுக்குநூறாக நொறுங்கி தீப்பிடித்தது. இதில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் இவர். இந்த நிகழ்ச்சி நடந்து சில மாதங்கள்தான் ஆகின்றன. அதற்குள் மற்றொரு முதல்வர் பலியாகி விட்டார் என்பதுதான் வேதனைக்குரிய ஒரு விஷயமாகும்.
அருணாசல பிரதேச முதல்வராக இருந்தவர் டோர்ஜிகாண்டு. இவர் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தவாங் என்ற இடத்தில் இருந்து தலைநகர் இட்டாநகர் நோக்கி புறப்பட்டார். காலை 9.50 மணிக்கு இவரது ஹெலிகாப்டர் புறப்பட்டது. 2 மணி நேரத்தில் இவர் இட்டாநகர் போய்ச் சேர வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடத்திலேயே அந்த ஹெலிகாப்டர் தரை கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஹெலிகாப்டரை பதட்டத்துடன் தேடினார்கள். சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பூடானில் அது தரையிறங்கியதாகவும் முதல்வர் உள்ளிட்ட 5 பேரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியானது.
ஆனால் இந்த தகவல் மறுநாளே பொய்த்துப் போனதுதான் வேதனைக்குரிய விஷயம். முதல்வர் காண்டு சென்று ஹெலிகாப்டர் பூடானில் தரையிறங்கவில்லை. இது உறுதியானதும் ராணுவ அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் அங்குள்ள வனப்பகுதிகளுக்கு ஹெலிகாப்டரில் சென்று பரபரப்போடு தேடினார்கள். இந்த தேடும் பணி கிட்டத்தட்ட 4 நாட்கள் நீடித்தது. 4 நாட்கள் வரை முதல்வர் என்னவானார் என்பது பற்றி தெரியவே இல்லை. கடைசியாக நேற்று முன்தினம் முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இடத்தை நோக்கி மீட்பு குழுவினர் விரைந்தனர்.
4 நாட்கள் வரை முதல்வரோ அல்லது மற்றவர்களோ உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஹெலிகாப்டர் விழுந்த இடம் நோக்கி மீட்பு குழுவினர் சென்றனர். அப்போது முதல்வர் டோர்ஜிகாண்டு சென்ற ஹெலிகாப்டர் விழுந்த இடம் தெரியவந்து அங்கு சென்ற போது முதல்வரின் உடல் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடன் சென்ற பைலட்டுகள் பாபர், மம்மிக் ஆகியோரும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி யஷீசடோக் என்பவரும் தவாங் எம்.எல்.ஏவின் சகோதரி யஷீலாமூ என்பவரும் அங்கு சிதைந்த நிலையில் பலியாகி கிடந்தனர்.
பாராளுமன்ற ராஜ்யசபா எம்.பி. முகுத்பித்தி முதல்வர் பலியானதை உறுதி செய்தார். முன்னதாக அந்த பகுதி கிராமவாசிகள் விழுந்த கிடந்த ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களையும், அழுகிய நிலையில் கிடந்த உடல்களையும் கண்டு பிடித்து காலை 10 மணியளவில் பாதுகாப்பு ஏஜென்சிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த இடம் ஷீலாபாஸ் என்ற இடத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு அருவி ஒன்று உள்ளது. அந்த அருவியின் பெயர் ஜோங் என்பதாகும். இந்த இடத்தில் இருந்துதான் ஹெலிகாப்டருடனான தொடர்பு கடைசியாக துண்டிக்கப்பட்டது. அந்த இடத்தில் முதல்வரும் மற்றும் நால்வரும் பலியானதை கிராமவாசிகளுடன் சேர்ந்து முகுத்பித்தி எம்.பி. ஊர்ஜிதம் செய்தார்.
டெல்லியில் இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரமும் ஊர்ஜிதம் செய்தார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், டோர்ஜிகாண்டு பலியானதை உறுதி செய்தார். இவர் மட்டுமின்றி அருணாசல பிரதேச முதல்வர் டோர்ஜிகாண்டுவின் உறவினரும், பஞ்சாயத்து தலைவருமான மற்றொரு நபரும் டோர்ஜிகாண்டுவின் உடலை அடையாளம் கண்டறிந்து கூறினார். இந்த தகவலை மற்றொரு மத்திய அமைச்சரான ஹேன்டிக் தெரிவித்தார். இது பற்றி இட்டாநகரில் கூறிய அவர்,
பஞ்சாயத்து தலைவர் துப்தென், முதல்வரின் உடலை அடையாளம் கண்டறிந்து கூறியதாக தெரிவித்தார். விபத்தில் சிக்கி பலியான டோர்ஜிகாண்டுவுக்கு வயது 56. இவரது உடல் மட்டுமின்ற மற்ற நால்வரின் உடல்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிப் போயிருந்தன. இது பார்த்தவர் மனதை பதற வைத்தது. உருக வைத்தது. சம்பிராதயங்கள் அனைத்தும் பூர்த்தியான பிறகே அதிகாரபூர்வமாக தாங்கள் இச்செய்தி தெரிவிப்பதாக அமைச்சர் ஹேண்டிக் மேலும் தெரிவித்தார். அருணாசல பிரதேச முதல்வர் பலியானது அம்மாநிலத்தில் உள்ள மக்களை துயரக் கடலில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆந்திர மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் தன்பால் ஈர்த்த புட்டபர்த்தி சாய்பாபா தனது 85 வது வயதில் காலமானார். அந்த சோகம் முடிவதற்குள் இப்போது மற்றொரு சோகம் நிகழ்ந்து விட்டது என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். அருணாசல பிரதேச முதல்வர் பலியானதற்கு தேசிய தலைவர்கள், மாநில தலைவர்கள் அனைவரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் பலியான முக்கியமானவர்கள்:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
என்.வி.என்.சோமு
மாதவராவ் சிந்தியா
ஜி.எம்.சி.பாலயோகி
செளந்தர்யா
ஹரியானா மின்துறை அமைச்சர்
ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி
ஹெலிகாப்டர் மற்றும் விமான விபத்துக்களில் தப்பிப் பிழைத்த முக்கிய புள்ளிகள்:
மொரார்ஜி தேசாய்
அகமது பட்டேல்
பிரிதிவிராஜ் சவான்
ராஜ்நாத்சிங்
முக்தர் அப்பாஸ் நக்வி
அசோக் கெல்லட்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.