முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரசாந்த் பூஷனின் பரபரப்பு கேள்விகள்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,மே.6 - ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் பரபரப்பு கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான பொதுநல வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ஆஜரான பிரசாந்த் பூஷன் சரமாரி கேள்விகளை எழுப்பினார். அதாவது, கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளுக்கு ரூ. 200 கோடி மதிப்புள்ள நிலத்தை டாடா குழுமம் வழங்கியது தொடர்பாக குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாதது ஏன்? தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொழிலதிபர் டாடா நன்றி தெரிவித்து கடிதம் எழுதியது பற்றி குற்றப்பத்திரிக்கையில் இடம் பெறாதது ஏன்? மர்மமான முறையில் மரணமடைந்த சாதிக் பாட்சா குறித்தும் எதுவும் இடம் பெறாதது ஏன் என்று அவர் பரபரப்பான கேள்விகளை எழுப்பினார். இந்த வழக்கில் இருந்து முக்கிய புள்ளிகளை காப்பாற்ற முயற்சி நடக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும் இது தொடர்பாக பிரசாந்த் பூஷன் தெரிவித்த யோசனை பற்றி பரிசீலிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கலைஞர் டி.வியின் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மையத்தின் சார்பாக வழக்கு தொடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்