முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் 2-வது தலைவர் சாவு

புதன்கிழமை, 17 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

சனா, ஏமன், ஜூலை.18 ​- அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் 2-வது படைத் தலைவராக  விளங்கிய சயீத் அல்ஸிகிரி அமெரிக்காவின் ஆளில்லா  விமானம் தாக்கியதில் இறந்தார். ஏமனில் இயங்கி வந்த இந்த இயக்கத்தின் முக்கிய பிரமுகராக இவர் இருந்து வந்தார். 

 சவூதி அரேபியாவில் பிறந்த சயீத் அல்ஸிகிரி ஜனவரி மாதம் இறந்துள்ளார். அதுபற்றிய விவரம் ராணுவ இணையதளத்தில் வெளியடப்பட்டுள்ளது. ஏமன் நாட்டு அதிகாரி ஒருவர் இதைத் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு முன்பு காயமடைந்த இவர் இறந்ததாக சபா என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவருக்கு அபு சுப்யான் அல்-அஸ்டி என்ற பெயரும் உண்டு. இவர் ஆப்கானிஸ்தானில் போரிட்டு வந்தார். கடந்த 6 ஆண்டுகளாக குவாண்டமோவில் தங்கி இருந்தார். இவர் 2007-ம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குத் திரும்பினார். பின்னர் இவர் ஏமன் நாட்டுக்குச் சென்று அல்ஹொய்தா இயக்கத்தில் பணியாற்றி வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்