முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர இடைத்தேர்தலில் நடிகை ரோஜா பிரசாரம்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      சினிமா
Image Unavailable

கடப்பா,மே.6 - ஆந்திர இடைத்தேர்தலை முன்னிட்டு நடிகை ரோஜா பிரசாரம் செய்தார். 5 மாநில சட்டசபை தேர்தலோடு சில இடங்களில் இடைத்தேர்தல்களும் நடக்கின்றன. குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் கடப்பா எம்.பி. தொகுதிக்கும் புலிவெந்துலா சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் கடப்பா எம்.பி. தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். புலிவெந்துலா தொகுதியில் ஒய்.எஸ். ஆர்.மனைவி போட்டியிடுகிறார். இங்கு வரும் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் காங்கிரஸ், தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற கட்சிகள் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது. ஜெகன்மோகன் ரெட்டிக்காக நடிகை ரோஜா பிரசாரம் செய்தார். அப்போது அவர் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.பணிகளை சுட்டிக்காட்டி ஜெகன்மோகனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதே தொகுதியில் காங்கிரஸ் தலைவர்களும் தெலுங்குதேச தலைவர்களும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த பிரசாரத்தின்போது நடிகர் சிரஞ்சீவி,சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. இதையடுத்து தேர்தலை அமைதியாக நடத்தும் பொருட்டு இந்த தொகுதிகளில் மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்