முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை லீனா மரியம்பால் ஜாமீன் மனு தள்ளி வைப்பு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 23 - மோசடி வழக்கில் கைதான நடிகை லீனாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்த வழக்கில் மலையாள நடிகை லீனா மரியம்பால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்ததார். இந்த மனு நீதிபதி ராஜேந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இது மிகப்பெரிய மோசடி வழக்கு என்றும், லீனா மரியம்பாலை பல இடங்களில் தேடி மிக கஷ்டப்பட்டு மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர். என்றும் இவருக்கு ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகி விடுவார் என்று வாதம் செய்தார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வரும் 26-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்