எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,ஜுலை.25 - பிடிவாரண்டு உத்தரவு எதிரொலியாக இயக்குனர் சீமான ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜரானார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந் தேதி தமிழ்திரையுலக தமிழின உணர்வுக்குழு சார்பில் இயக்குனர் மனோபாலா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியேர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கியூபிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 19-ந் தேதி இயக்குனர் சீமான் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று இயக்குனர் சீமான் ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி சதாசிவம் முன்னிலையில் ஆஜரானார். அவர்மீதான பிடிவாரண்டு உத்தரவை விலக்கி நீதிபதி உத்தரவிட்டார். இதன்பின்னர் இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- ராமேசுவரத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக என்மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காரணத்திற்காக அப்பேதைய அரசு தொடர்ந்தது. இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன். தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு பணம் கொடுக்க கூடாது, ஆயுதங்கள் வழங்கக்கூடாது என்று மட்டுமே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆதரித்து பேசுவது குற்றம் இல்லை என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியுள்ளது. இதேபோன்று புதுச்சேரியில் தொடரப்பட்ட வழக்கில் விடுதலை செய்து நீதிபதி புவனேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். தற்போது இதேபோன்று தமிழகத்தில் 10வழக்குகள் என்மீது போடப்பட்டுள்ளன. அனைத்து வழக்குகளையும் சட்டப்படி சந்திப்பேன். தமிழகத்தில் மக்களிடம் தமிழ் உணர்வை வளர்க்க அரசு கவனம் செலுத்த வேண்டும். மணல்கொள்ளையை தடுத்து விதிப்படி மணல் அள்ளுவதை உறுதி செய்யவேண்டும். தனியாரிடம் தண்ணீரையும், மணலையும் விற்பனை செய்யக்கூடாது. வருங்கால சந்ததியினர் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே, இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நெய்வேலி நிலக்கரிசுரங்க பங்குகளை அரசே வாங்கிகொள்ளும் என்று முதல்அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தது வரவேற்கத்தக்க முடிவு. இதனால் முதல்அமைச்சருக்கு ஏற்பட்ட புகழை கருணாநிதியால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதுபற்றிய முரணான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும், அன்னிய முதலீட்டை பாராளுமன்றத்தில் ஆதரித்துவிட்டு தற்போது எதிர்ப்பது நாடக விளையாட்டு. எந்தபிரச்சனையும் இல்லாததால் தற்போது கச்சத்தீவு பிரச்சனையை கருணாநிதி கையில் எடுத்துள்ளார். அதை தாரை வார்க்கும்போது தடுக்காமல்விட்டுவிட்டு இப்போது குரல் கொடுப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல். இலங்கை திரிகோணமலை பகுதியில் சீனா படைத்தளத்தினை அமைத்துள்ளது. அந்த பகுதியில் நவீன யுக்தியை பயன்படுத்தி கடல்வளத்தை அள்ளிகொண்டு வருகிறது. இதற்கு தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிப்பது இடையூறாக உள்ளது. சீனாவின் நிர்ப்பந்தத்தால் இலங்கை அரசு தமிழக மீனவர்களை விரட்டி தாக்கி வருகிறது. இந்திய எல்லைப்பகுதியில் நமது இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீனா அபகரித்து வருகிறது. இதனை இந்தியா கண்டுகொள்ளாமல் உள்ளது. விரைவில் இதன் பாதிப்பு இந்திய மக்களை தாக்கும். அப்போதுதான் மத்திய அரசின் கவனக்குறைவு வெளிச்சத்துக்கு வரும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்பு மசோதாவால் மக்களுக்கு பயன்இல்லை. வறுமையை ஒழிக்காமல் அரிசி கொடுப்பது தவறு. தமிழகத்தில் கொலை குற்றங்களில் ்டுபடுபவர்களை கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தந்து அதன்விவரங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்படும். இவ்வாறு கூறினார். அப்போது, நாம்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் டோமினிக்ரவி, மாவட்;ட செயலாளர் கண்.இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024