முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தையின் அஸ்தியைத் திருடிய இளைஞர் கைது

புதன்கிழமை, 24 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், ஜூலை. 25 - அமெரிக்காவில், போதைப்பொருள் இருப்பதாக கற்பனை செய்து தவறுதலாக அஸ்தி இருந்த பர்ஸை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் வசித்து வருபவர் மோனிகா தாமஸ் என்ற பெண்மணி. இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. பிறந்து சில மணி நேரங்களிலேயே, மரணமடைந்தது அந்த ஆண் குழந்தை. ஆன போதும் குழந்தையை பிரிய மனம் வராத அந்த தாய், குழந்தையின் அஸ்தியை ஒரு சிறிய டப்பாவில் போட்டு, அதன் மீது அக்குழந்தையின் பெயர் மற்றும் பிறப்பு, இறப்பு விஷயங்களை எழுதி வைத்திருந்தார். அதனை எப்போதும் தனது பர்ஸிலேயே வைத்திருந்தார் மோனிகா. அதனைத் தவறுதலாக போதைப் பொருள் என கருதிய இளைஞர் ஒருவர் மோனிகாவின் பர்ஸை திருடிச் சென்று விட்டார். போலீஸ் தேடுதல் வேட்டையில் சிக்கிய அந்த இளைஞன், தனது தவறை ஒத்துக் கொண்ட போதிலும், திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்