எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் ஜூலை.26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அவர்கள், மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஐயப்பன் கோயில் பின்புறம் காந்தி நகரில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாயவிலைக்கடை, வகுரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடை, வசந்தபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது முதன்மைச் செயலர் உணவு பொருள் வழங்கல் துறை எம்.பி. நிர்மலா, உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் ஸ்வரன்சிங் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் எம். சந்திரசேகரன், மாவட்ட ஆட்சித்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு சீரான முறையில் தரமான அரிசி வழங்கப்படுகிறதா, அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப்பொருட்கள் இருப்பில் உள்ளதா என்பதையும், ஆய்வு செய்ததோடு அங்குள்ள பொதுமக்களிடம் நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்பதை உணவுத்துறை அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஆய்வு செய்தபோது அங்கு அரிசி, கோதுமை சர்க்கரை, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு லாரிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பும் முறை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி மூட்டைகளின் எடையும் சரிபார்க்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுகூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 1 கோடி 84 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் ஒப்பற்ற திட்டத்தை வழங்கி வருகிறார். மாதம் ஒன்றுக்கு 3.16 இலட்சம் மெ.டன் தரமான அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30க்கும் 1 கிலோ உளுந்தம்பருப்பு ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25-க்கும், மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4,900 கோடி மானியமாக வழங்கியுள்ளார்கள். இதனடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.291 அரசு மானியமாக வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த ஒரு கிலோ அரிசி ரூ.20 -க்கு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 279 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாயவிலை அங்காடிகளில் இன்றுவரை 30,600 குவிண்டால் தரமான அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பை அம்மா அளித்து வருகிறார். அதன் காரணமாக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தற்போது 29,060 கிலோ லிட்டராக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் தமிழகத்தின் முழுத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர் புதுடெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் மூலம் 19,143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11,655 நபர்கள் கைது செய்யப்பட்டு அதில் 418 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 702 முழுநேர நியாயவிலைக்கடைகள் 197 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் மூலம் மாதந்தோறும் 4.98,847 குடும்ப அட்டைதாரர்களுக்கு சராசரியாக 5800 மெ.டன் விலையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளிலிருந்து அனுப்ப்பபடும் அரிசி தரம் தரக்கட்டுப்பாடு அலுவலர்களால் தீவர பரிசோதனைக்கு பின்னரே அங்காடிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தரமற்ற அரிசியை கிடங்கிலிருந்து அனுப்பக் கூடாது. விலையில்லா அரிசி சரியான எடையில் பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், பொதுவிநியோகத்திட்டத்தை செயல்படுத்துவதில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ்டுபடவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வுத்துறை, காவல் கண்காணிப்பாளர் ஆசியம்மாள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர்,உ.தனியரசு, சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செங்குட்டுவன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கம் முத்துகுமாரசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.