எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல் ஜூலை.26 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் அவர்கள், மாண்புமிகு தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.பி.தங்கமணி ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் ஐயப்பன் கோயில் பின்புறம் காந்தி நகரில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்க நியாயவிலைக்கடை, வகுரம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடை, வசந்தபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு, நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது முதன்மைச் செயலர் உணவு பொருள் வழங்கல் துறை எம்.பி. நிர்மலா, உணவு பொருள் வழங்கல் துறை ஆணையாளர் ஸ்வரன்சிங் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குநர் எம். சந்திரசேகரன், மாவட்ட ஆட்சித்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வின்போது நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு சீரான முறையில் தரமான அரிசி வழங்கப்படுகிறதா, அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப்பொருட்கள் இருப்பில் உள்ளதா என்பதையும், ஆய்வு செய்ததோடு அங்குள்ள பொதுமக்களிடம் நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்பதை உணவுத்துறை அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஆய்வு செய்தபோது அங்கு அரிசி, கோதுமை சர்க்கரை, துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு, பாமாயில் ஆகியவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும், கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு லாரிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பும் முறை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். கிடங்கிலிருந்து நியாயவிலைக்கடைகளுக்கு கொண்டு செல்லும் அரிசி மூட்டைகளின் எடையும் சரிபார்க்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுகூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:
தமிழக முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 1 கோடி 84 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் ஒப்பற்ற திட்டத்தை வழங்கி வருகிறார். மாதம் ஒன்றுக்கு 3.16 இலட்சம் மெ.டன் தரமான அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30க்கும் 1 கிலோ உளுந்தம்பருப்பு ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25-க்கும், மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4,900 கோடி மானியமாக வழங்கியுள்ளார்கள். இதனடிப்படையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ.291 அரசு மானியமாக வழங்கப்படுகிறது. வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்த ஒரு கிலோ அரிசி ரூ.20 -க்கு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 279 கூட்டுறவு மற்றும் அமுதம் நியாயவிலை அங்காடிகளில் இன்றுவரை 30,600 குவிண்டால் தரமான அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு முழுமையான உணவு பாதுகாப்பை அம்மா அளித்து வருகிறார். அதன் காரணமாக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விளக்கு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தற்போது 29,060 கிலோ லிட்டராக குறைந்துள்ளது. தமிழக முதல்வர் தமிழகத்தின் முழுத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். தமிழக முதலமைச்சர் புதுடெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது அத்தியாவசியப் பொருட்கள் கடத்தப்படுவது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழகத்தில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் மூலம் 19,143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11,655 நபர்கள் கைது செய்யப்பட்டு அதில் 418 நபர்கள் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 702 முழுநேர நியாயவிலைக்கடைகள் 197 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் மூலம் மாதந்தோறும் 4.98,847 குடும்ப அட்டைதாரர்களுக்கு சராசரியாக 5800 மெ.டன் விலையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளது. நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளிலிருந்து அனுப்ப்பபடும் அரிசி தரம் தரக்கட்டுப்பாடு அலுவலர்களால் தீவர பரிசோதனைக்கு பின்னரே அங்காடிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தரமற்ற அரிசியை கிடங்கிலிருந்து அனுப்பக் கூடாது. விலையில்லா அரிசி சரியான எடையில் பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும், பொதுவிநியோகத்திட்டத்தை செயல்படுத்துவதில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ்டுபடவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வுத்துறை, காவல் கண்காணிப்பாளர் ஆசியம்மாள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர்,உ.தனியரசு, சாந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செங்குட்டுவன், இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கம் முத்துகுமாரசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கூட்டுறவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.