முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா சிறையில் இருந்து 1000 கைதிகள் தப்பினர்

திங்கட்கிழமை, 29 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

திரிபோலி, ஜூலை. 29 - லிபியாவின் கிழக்கு பகுதி நகரான பெங்காஸி அருகே சிறையை உடைத்துக் கொண்டு சுமார் ஆயிரம் கைதிகள் தப்பி விட்டனர். காய்பியா சிறையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்று அரசு பாதுகாப்பு பிரிவு அதிகாரி தெரிவித்தார். 

லிபியாவின் முக்கிய நகரங்களில் இஸ்லாமிய கூட்டணி கட்சிகளின் அலுவலகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிடும் போராட்டத்தின் போது இந்த சிறை உடைப்பு முயற்சி நடந்துள்ளது. கைதிகள் தப்ப ஆர்ப்பாட்டக்காரர்கள் உதவினார்களா என்பது பற்றி உடனடியாக தகவல்கள் இல்லை. எனினும் சிறையை உடைத்து கொண்டு கைதிகள் தப்பியது உண்மை என்பதையும், கைதானவர்கள் பலர் கொடிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் என்றும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்