முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்துக்களை அபரிக்கப் பார்க்கிறார் தேவதாஸ்: கனகா

செவ்வாய்க்கிழமை, 30 ஜூலை 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை 30 - எனக்கு புற்று நோய் என வதந்தி பரப்பி என் சொத்துக்களை அபகரிக்க பார்க்கிறார் என நடிகை கனகா தனது தந்தை தேவதாஸ் மீது குற்றம் சாட்டினார். நடிகை கனகா புற்று நோயால் அவதிப் படுதாகவும் இதற்காக கேரளாவில் ஆலப் புழாவில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருதாகவும் தன்னை யாரும் சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகத்தை கேட்டு கொண்டுள்ளதாகவும் கடந்த இரு நாட்களாக பரபரப்பு செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில் நேற்று மதியம் ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகை கனகா கூறியதாவது:-

நான் ஆலப் புழாவில் சிகிச்சை பெற்று வருவதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை. சென்னை வீட்டில் தான் தாங்கி இருக்கிறேன். புற்றுநோய் என்றுதான் வதந்தி பரவி இருக்கிறது தவிர, நல்ல வேளை எய்ட்ஸ், என்று செய்தி வரவில்லையே என்று நினைக்கும்போது நிம்மதி பெருமூச்சு விடுகிறேன்.

இந்த வதந்திகளை என் தந்தை எனக் கூறி கொண்டு திரியும் தேவதாஸ் தான் பரப்பி வருகிறார். இதையே சாக்காக வைத்து என்னை சந்தித்து பேசி, மறுபடியும் என் சொத்துக்களை அபகரிக்க பார்க்கிறார். இல்லையென்றால் ஆலப்புழாவில் நான் சிகிச்சை பெற்று வருகிறேன் என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில் என்னைத் தேடி சரியாக சென்னையில் நான் இருப்பதை எப்படி அவரால் அறிந்து கொள்ள முடிகிறது.

என்னைத்தேடி ஆலப்புழாவுக்கு போகாமல் மிகச்சரியாக சென்னையில் உள்ள என் வீட்டுக்கு எப்படி வருகிறார். அவரை என் வீட்டிற்குள் வர நான் அனுமதிக்க மாட்டேன். என் அம்மாருக்கு ஒரு நாளும் அவர் நல்ல கணவனாக நடந்து கொண்டதே இல்லை.

எனக்கு ஒரு நல்ல தந்தையாக எந்நாளும் நடந்து கொண்டதில்லை. அவர் ஒரு பணப்பேய் அவரால்தான் எனக்கு ஆண்களைப் போய் விட்டது. அதனால் தான் திருமணமே வேண்டாம் என முடிவேடுத்து தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எனது தனிமையை தவிர்ப்பதற்காக வீட்டில் 35 பூனைகளை வளர்கிறேன். நாய், கோழி இவற்றுடன் தான் வசிக்கிறேன். மனிதர்களை விட இவைகள் எவ்வளவோ மேல் என் உதவிக்கு, என் தேவைகளை கவனித்துக் கொள்ள என் வேலைக்கொள்ள என் வேலைக்காரி மட்டுமே உடனிருக்கிறார்.

எக்காரணத்தை கொண்டும் எனக்கு தந்தை என்று கூறிவரும் தேவதாசை என் வீட்டிற்குள் அவரை அனு மதிக்கமாட்டேன். என் அம்மாருக்கு அவர் செய்ததுரோகத்தை நான் மன்னிக்கவே மாட்டேன். அதே மாதிரி சில நடிகர், நடிகைகளிடம் பேச முயற்சித்தேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேச விரும்பவில்லை. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. வாசலில் வந்து நின்ற தேவாசை துரத்திவிட்டேன். அவரது முகத்தை பார்க்க கூட நான் விரும்பவில்லை. எனது இறுதிமூச்சு 

உள்ள வரை இதில் நான் உறுதியாக இருப்பேன். ஒரு நாளும் இதில் மாற்றம் கிடையாது. இவ்வாறு கூறினார்.

 

கனகாவின் தந்தை தேவதாஸ் கூறியதாவது:-

 

கனகாவுக்கு புற்றுநோய் என்ற செய்தியை கேள்விப்பட்டு நான் சென்னையில் உள்ள கனகாவின் வீட்டிற்கு சென்றேன். ஆனால் கனகா என்னை பெற்ற தந்தை என்றும் பாராமல் வேலைக்காரியை விட்டு துரத்தி விட்டார். என்னதான் என்னை கனகா துரத்தினாலும் அவள் என் மகள் அவள் மீதான பாசம் ஒரு போதும்  என்னிடம் குறையாது. கனகாவின் தனிமை தான் அவளை இந்த நிலைக்கு கொண்டு வன்து விட்டிருக்கிறேன்.

தொடர்ந்து கனகாவை சந்திக்க முயற்சித்து வருகிறேன். பத்திரிக்கையில் வந்த செய்திபடி கனகாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் எவ்வளவு பணம் செலவழித்தாலும் கனகாவைப் காப்பற்றி விடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில் நடிகை கனகா இறந்துவிட்டதாகவும் நேற்று பரபரப்பான செய்தி ஒன்றும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்