எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருத்தணி, பிப்.23 - திருத்தணி ஒன்றியம் சத்துருஞ்செயபுரம் ஊராட்சியிலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மற்றும் மேதினிபுரம் ஆகிய கிராங்களில் காலம் காலமாக வசித்து வருபவர்களின் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை மோசடியாக விற்பனை செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தியும், 5 ஆயிரம் மக்களை காலி செய்து விட்டு, அந்த நிலத்தை கோபாலபுரத்தை சேர்ந்த பெண்மணி மூலம் வெளி மாநில நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சியை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவார். விரைவில் கருணாநிதியின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது என்று அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆணைக்கிணங்க திருத்தணி நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும், திருத்தணி நகரத்திற்கு உள்ளே வருவதற்கு கட்டப்படும் பாலத்தின் பணிகளை விரைந்து முடித்திடவும் வீட்டுவரி உயர்வையும், பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடப்படுவதையும், திருத்தணி கமலா தியேட்டர் அருகில் நேற்று (22.2.2011) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மேற்கு எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.அரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கண்டன உரையாற்றிய மதுசூதனன் பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் ஜெயலலிதா ஆணைங்கிணங்க இங்கு மிகபெரிய பிரம்மாண்டமான அளவில் மக்கள் வெள்ளத்தில் இங்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. திருத்தணி ஒன்றியத்திலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மக்களை அப்புறப்படுத்த மைனாரிட்டி தி.மு.க. அரசு முயற்சி எடுக்கிறது. ஆனால் ஜெயலலிதா இன்றைக்கும் மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்கள் வாழ்வதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமிய மக்களை ஏமாற்றுவதே கருணாநிதியின் வேலை. சென்னை கோபாலபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி இந்த மூன்று கிராமங்களை கையகப்படுத்த நினைக்கிறார். ரூ.1 கோடியே எழுபத்து ஆறு லட்சத்திற்கு அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார். இதை அடி மாட்டு விலைக்கு வாங்கி வெளிமாநில நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நினைக்கிறார். காவல் துறைக்கு நான் சொல்லிக்கொள்வது ஏழை வயிற்றில் அடிக்காதீர்கள் .விரைவில் கோபாலபுரத்துக்காரரின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது. பொதுமக்களின் கண்ணீர் கருணாநிதி தண்ணீராக நினைக்கிறார். தர்மத்திற்கும், நீதிக்கும் வழி பிறக்கும் 1200 குடும்பம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகிற இடத்தை அபகரிக்க பார்க்கிறார். இது தி.மு.க.வுக்கு ஒன்றும் புதியது கிடையாது. என்.கே.கே.பி.ராஜா, வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் பல தி.மு.கவினர் கிராமங்களை காலி செய்து நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். நமிதா, நக்மா, குஷ்பு ராஜியத்தை பார்க்க கருணாநிதி நினைக்கிறார். இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கருணாநிதி நாடகம் நடத்துக்கிறார். அதில் ஒன்று கனிமொழி கைது. மீனவர்ளுக்கு பாடுபடும் ஒரே தலைவி ஜெயலலிதா இந்த 3 கிராமங்களை பற்றி கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் அ.தி.மு.க. சார்பில் பேச ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இதை பேச அனுமதி மறுக்கப்பட்டது. இன்னும் 3 மாதத்தில் மின்சார பற்றாக்குறை இருக்காது. விரைவில் ஜெயலலிதா முதல்வராக வரபோகிறார். இனி மக்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறு மதுசூதனன் பேசினார்.
இதில் அரசு முன்னாள் கொறடா நரசிம்மன், திருத்தணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.என்.கண்டிகை எ.ரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் டி.பார்த்தீபன், தொகுதி செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் லதா நீலகண்டன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் வேலஞ்சேரி எஸ்.பழனி நாகபூடி கோ.குமார், சேர்மேன் பி.ஜோதி, துணைத்தலைவர் எஸ்.நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் டி.எம்.சீனிவாசன், பொருளாளர் பத்மாபுரம் சுரேஷ், மணபாக்கம் மு.காமராஜ், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.பி.தாயுமாணவன், நகர இளைஞர் அணி செயலாளர் கேபிள் எம்.சுரேஷ், மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் என்.ஏ.குப்பன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜி.பெருமாள், உத்திரமேரூர் தங்கபஞ்சாட்சரம், கே.பரத் கிருஷ்ணா, நகர பாசறை செயலாளர் சி.ஜி.நந்தா, பள்ளிப்பட்டு ஒன்றியம் ஏ.ஆர்.கந்தப்பன், ஏ.ஜி.கருணாகரன், ஆர்.தேவன், டி.ஏ.சுரேஷ், ஓ.கோபி, எ.அமாவாசை, தட்சணாமூர்த்தி மற்றும் ஏ.எஸ்.பாலஜி, தெக்களூர் என்.சேட்டு, சம்பத் நாடார், கவுன்சிலர்கள் சி.முனுசாமி நிர்மல்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் டி.செளந்தர்ராஜன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,