முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேம்பால பணி: அமைச்சர்கள் பழனிச்சாமி - ராஜூ ஆய்வு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆகஸ்ட் 9  -  தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிச்சாமி மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தத்தில் ரூ.33.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சாலை மேம்பால கட்டுமானப்பணிகளையும், பரவையில் ரூ.850 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சுரங்கப்பாதை கட்டுமானப்பணிகளையும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத்தில் ரூ.19.75 கோடி மற்றும் ரூ.18.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சாலை மேம்பாலப்பணிகளையும், அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.  அதன்பின்னர் மதுரை நெடுஞ்சாலைத்துறை வட்ட அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:

 தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளை தரமுள்ளதாகவும், நீண்ட நாள் பயன்படக்கூடிய வகையிலும் அமைப்பதற்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.  ஆகவே, சாலைப்பணியில் ஈ்டுபட்டுள்ள பொறியாளர்கள், தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் அவ்வப்பொழுது சாலைகளை ஆய்வு செய்து தரமான, உறுதியான நீண்ட நாள் பயன்படக்கூடிய சாலைகளை அமைக்க வேண்டும் என்றார். 

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன்,மாவட்ட கலெக்டர் இல.சுப்பிரமணியன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், எம்.முத்துராமலிங்கம்,  எம்.வி.கருப்பையா  கே.தமிழரசன், சுந்தரராஜன், மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பெ.சாலைமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் மு.தர்மராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல், தலைமைப்பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கே.ஜெயராமன், தலைமைப்பொறியாளர் (நபார்டு கிராமச்சாலைகள்) கே.அம்ருதீன்,தலைமைப்பொறியாளர் (தேசிய நெடுஞ்சாலைகள்) எம்.நீலமேகம், தலைமைப்பொறியாளர் (திட்டங்கள்) ஏ.கணேசன், தலைமைப்பொறியாளர் (தரக்கட்டுப்பாடு) ஜி.சிவக்குமார், கண்காணிப்பு பொறியாளர் ஆர்.அருணாச்சலம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றம் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago