எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மே.- 8 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள் துறை அமைச்சர் சிதம்பரம் கைது செய்ய மனு தாக்கல் செய்ய உள்ளதாக சேலத்தில் அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். சேலம் தெற்கு அம்மாபேட்டை ஸ்ரீ குருதேவ் குருகுலம் விசுவ ஹிந்து பரிசத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியசுவாமி, விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் ஸ்ரீ வேதாந்தம் ஜீ சேலம் நாமக்கல், தருமபுரி மாவட்ட பொருளாளர் ஆத்மானந்தா, ஆகியோர் வந்திருந்தனர். மேலும் இதில் சேலம் மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் செயலாளர் கிருஷ்ணராஜ், ராஜராஜேஸ்வரி மகிளா சமாஜ் தலைவர் சிவாம்பா பார்வதி, பஜ்ரங்தள் மாநில இளைஞரணி செயலாளர் சிவலிங்கம், சேலம் மாவட்ட தலைவர் வக்கீல் சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் பஜ்ரங்தள் இளைஞர்கள் கராத்தே, சிலம்பம், கயிறு ஏறுதல், கல் எறிதல், கயிற்றில் தொங்கிகொண்டே செல்லுதல், நெருப்பு வளையத்திற்குள் குதித்தல் உள்ளிட்ட பயிற்சிகளை செய்து காட்டினர்.
இதனை தொடர்ந்து ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று மனு கொடுக்க உள்ளேன். ஸ்பெக்ட்ரம் அலை ஒதுக்கீடு 2001 ல் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு 10 மடங்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில் 2008 ல் அதே தொகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது இதில் 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஐடி ரிப்போட் தெரிவிக்கின்றது.
இந்த அலைகற்றை ஒதுக்கீடு விசயத்தில் ராஜா தனியாக முடிவெடுக்க முடியாது. 2003 ல் டெலிகாம் மினிஸ்டர் தனியாக முடிவெடுக்கூடாது என்றும் நிதியமைச்சருடன் சேர்ந்து முடிவெடுக்கவேண்டும் என்று கேபினேட்டில் பாஸ் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜாவும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரமும் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளனர். அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இதை பிரதமரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஊழலில் சிதம்பரத்திற்கும் பங்கு உண்டு. சிதம்பரம் அவரது மகன் கார்த்தி ஆகியோர் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நிலங்களை வாங்கியுள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ராஜா குற்றவாளி என்றால் சிதம்பரமும் குற்றவாளி இதை கோர்ட்டில் பதிவு செய்வேன். இவர் நிதியமைச்சராக இருந்தபோது தான் இது நடந்துள்ளது. சிதம்பரம் தானே ராஜினாமா செய்யவேண்டும். காங்கிரசுக்கு இதில் ஈடுபாடு உள்ளது காங்கிரசின் மிகப்பெரிய தலைவருக்கும் இதில் தொடர்புள்ளது.
சிவராஜ் பாட்டீல் மினிஸ்டராக இருந்தபோது துபாய் எட்டிசிலாட் நிறுவனத்திற்கும் நார்வே டெலிநார் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் எட்டிலாட் நிறுவனத்தின் பால்வா தாவுத் இப்ராஹிமின் கைக்கூலி ஆவார். டெலிநார் நிறுவனம் சைனா எக்யூப்மெண்டை பயன்படுத்துவார்கள் இதனால் ஜீரோ வார்சர் பயன்படுத்தி இந்தியாவின் ஒட்டு மொத்த கம்யூட்டர்களை செயல்படாதவாறு செய்ய முடியும். தற்போது இந்த நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பது இந்தியாவுக்கு தேச துரோகம் ஆகும் இதனால் சிதம்பரம் தேச துரோகம் செய்துள்ளார் இதற்காக தனியாக ஒரு மனு போடுவேன்.
தி.மு.க தலைவர் கருணாநிதி முன்னர் ஆ.ராஜா அப்பாவி என்றும் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது பொய் வழக்கு போடுவதாகவும் தெரிவித்தார். இப்போது தனது மகள் கனிமொழியை காப்பாற்றுவதற்காக ஆ.ராஜா வை குற்றவாளி என்று கூறி வருகிறார்.
கனிமொழி தனக்கு தெரியாது என்று மறுக்க முடியாது அவர் பல்வேறு இடங்களில் கையெழுத்து போட்டுள்ளார் இது மிகப்பெரிய குற்றமாகும். கருணாநிதி அவரது மனைவி, துணைவி, மகள் அனைவரையும் குற்றவாளி லிஸ்டில் சேர்க்கவேண்டும். எல்லோரும் ஒரே நேரத்தில் ஆஜரானால் அங்கு இடம் பற்றாக்குறை ஏற்படும் நெரிசல் ஏற்படும் ஏற்கனவே நெரிசலில் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக இது நடக்கும்.
தி.மு.க காங்கிரஸ் உறவை யாராலும் பிரிக்க முடியாது ஏனென்றால் இரு தரப்பினரும் ஊழல் குற்றவாளிகள். கருணாநிதி இதிலிருந்து தப்ப முடியாது. 214 கோடி வட்டியில்லா கடன் ஒரு சினி கம்பெனி கொடுத்துள்ளது. இதை யாரும் நம்ப முடியாது. நாட்டின் எதிர்காலமே இதில்தான் உள்ளது. இதை விரட்டாவிட்டால் நாடே குட்டிச்சுவர் ஆகிவிடும். குற்றவாளிகளை கைது செய்யும் வரை போராடுவேன் இவ்வாறு பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த