எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி, ஆக.11 - மாண்புமிகு நிதி அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சுருளி அருவி சாரல் திருவிழாவை துவக்கிவைத்து பேசுகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த நிதியாண்டில் சுமார் ரூபாய் 154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவி தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் பிரசித்துப்பெற்ற ஸ்தலமாகும் இவ்வருவிக்கு மிக பழமையான வரலாற்றுச் சிறப்பு உண்டு. இங்கு சித்தர்களும் யோகிகளும் வந்துசென்ற சிறப்பு வாய்ந்த இடமாகும். தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களான கும்பக்கரை அருவி, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற வகையில் புங்ைகாக்களை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
மேலும் மேகமலைக்குச் செல்லுகின்ற தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்காக ரூபாய் 90 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் தமிழக முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 அரசு கலைக்கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் 11 தொழில்நுட்ப கல்லூரிகளையும் அமைக்க ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த வாரம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேக்கம்பட்டியில் புதிதாக தொழில்நுட்ப கல்லுரியில் வகுப்புகள் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஐந்து அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தினை அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள் அவற்றில் போடிநாயக்கனுனூர் ஒன்றாகும். தேனி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக 1500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டையினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் தமிழக அரசு மேற்கொள்கின்ற அணைத்து வளர்ச்சிப்பணிகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சுருளி அருவி சாரல் திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் பிற துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் திறந்துவைத்து பேசியபோது தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்துத்துறை வளர்ச்சிகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் மக்களை கவருகின்ற வகையில் ம்ேபடுத்துவதற்காக போதிய நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற சுற்றுலா விழாக்களை அந்த மாவட்டத்திற்கு தகுந்தாற்போல் நடத்திட ஆணை பிறப்பித்துள்ளார்கள். அந்;த அடிப்படையில் இன்றைய தினம் தேனி மாவட்டம் சுருளி சாரல் திருவிழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா விழாக்களை நடத்துவதற்கு காரணம் கண்ணிற்கு குளுமையினையும், இதயத்திற்கு இனிமையினையும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலா விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாண்டில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அதேபோன்று குற்றாலம், ஓகேனிக்கல் மற்றும் சுருளி அருவியில் அதிகமான நீர் கொட்டுவதால் அவற்றில் நீராடுவதற்காக ஆயிரக்கனக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.
தேனி மாவட்டம் அதிகப்படியான சுற்றலா பயனிகளை கவருகின்ற வகையில், கும்பக்கரை அருவி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மேகமலை ஆகிய ஸதலங்கள் அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான சுற்றுலா பயனிகள் வருகை தருவதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களது கோர்யீக்கையினை அறிக்கையாக பெற்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கருத்துரு தயாரித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டுசென்று சுற்றுலா ஸ்தலங்களில் அடிப்படை தேவைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றைய விழாவில் அனைத்துத்துறைகளின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை தெரிவிக்கின்ற வகையில் பல்வேறு கண்கவர் காட்சிகளை அமைத்துள்ளார்கள். குறிப்பாக தோட்டாக்கலைத்துறையின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்பட்ட கர்னல் பென்னிகுவிக் மணிமண்டபத்தின் மாதிரியை காய்கறிகளைக் கொண்டு நேர்த்தியாக அலங்கரித்துள்ளார்கள.; அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவீண்குமார் அபினபு, இ.கா.ப. அவர்கள், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.லாசர் அவர்கள், கம்பம் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.தங்க முருகன் அவர்கள், சுருளிபட்டி ஊராட்சிமன்றத்தலைவர் திரு.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.முருகேசன் அவர்கள், கம்பம் நகர்மன்றத்தலைவர் திரு. சிவக்குமார் அவர்கள்,; மேகமலை வன உயிரின காப்பாளர் திரு.வெங்கிடசாமி அவர்கள், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிவ.ஜானகி அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மகாலிங்கம் அவர்கள், துணைத்தலைவர் திரு.ஆண்டி அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எம்.ஆர்.்ஸ்வரன் அவர்கள், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமதி.்ஸ்வரி பாலன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.என்.ரமேஷ், வட்டாட்சியர் திரு.தனலிங்கம் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜீவரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஜெ.விஜயாராணி அவர்கள வரவேற்புரையாற்றினார், சுற்றுலா அலுவலர் திரு.குணசேகரன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.