பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள 'பாதுகாப்பு அதிகாரி' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி, ஆக.11 - மாண்புமிகு நிதி அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சுருளி அருவி சாரல் திருவிழாவை துவக்கிவைத்து பேசுகையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்த நிதியாண்டில் சுமார் ரூபாய் 154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவி தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில் பிரசித்துப்பெற்ற ஸ்தலமாகும் இவ்வருவிக்கு மிக பழமையான வரலாற்றுச் சிறப்பு உண்டு. இங்கு சித்தர்களும் யோகிகளும் வந்துசென்ற சிறப்பு வாய்ந்த இடமாகும். தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களான கும்பக்கரை அருவி, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை ஆகியவற்றில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற வகையில் புங்ைகாக்களை அமைப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கனிவான பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
மேலும் மேகமலைக்குச் செல்லுகின்ற தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்துவதற்காக ரூபாய் 90 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மேலும் தமிழக முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 36 அரசு கலைக்கல்லூரிகளையும், 4 பொறியியல் கல்லூரிகளையும் 11 தொழில்நுட்ப கல்லூரிகளையும் அமைக்க ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் கடந்த வாரம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேக்கம்பட்டியில் புதிதாக தொழில்நுட்ப கல்லுரியில் வகுப்புகள் துவக்கிவைக்கப்பட்டுள்ளன. தற்சமயம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஐந்து அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தினை அமைக்க உத்தரவிட்டுள்ளார்கள் அவற்றில் போடிநாயக்கனுனூர் ஒன்றாகும். தேனி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக 1500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தொழிற்பேட்டையினை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் தமிழக அரசு மேற்கொள்கின்ற அணைத்து வளர்ச்சிப்பணிகளுக்கும் திட்டங்களுக்கும் போதிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென மாண்புமிகு தமிழக நிதி அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
சுருளி அருவி சாரல் திருவிழாவில் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் வனத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மற்றும் பிற துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் திறந்துவைத்து பேசியபோது தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அனைத்துத்துறை வளர்ச்சிகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலங்கள் மக்களை கவருகின்ற வகையில் ம்ேபடுத்துவதற்காக போதிய நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். தமிழகத்தில் பிரசித்திப்பெற்ற சுற்றுலா விழாக்களை அந்த மாவட்டத்திற்கு தகுந்தாற்போல் நடத்திட ஆணை பிறப்பித்துள்ளார்கள். அந்;த அடிப்படையில் இன்றைய தினம் தேனி மாவட்டம் சுருளி சாரல் திருவிழா மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா விழாக்களை நடத்துவதற்கு காரணம் கண்ணிற்கு குளுமையினையும், இதயத்திற்கு இனிமையினையும் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுலா விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாண்டில் தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. அதேபோன்று குற்றாலம், ஓகேனிக்கல் மற்றும் சுருளி அருவியில் அதிகமான நீர் கொட்டுவதால் அவற்றில் நீராடுவதற்காக ஆயிரக்கனக்கான மக்கள் வந்துசெல்கின்றனர்.
தேனி மாவட்டம் அதிகப்படியான சுற்றலா பயனிகளை கவருகின்ற வகையில், கும்பக்கரை அருவி, வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மேகமலை ஆகிய ஸதலங்கள் அமைந்துள்ளது. இங்கு அதிகப்படியான சுற்றுலா பயனிகள் வருகை தருவதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்று மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அவர்களது கோர்யீக்கையினை அறிக்கையாக பெற்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கருத்துரு தயாரித்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு கொண்டுசென்று சுற்றுலா ஸ்தலங்களில் அடிப்படை தேவைகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றைய விழாவில் அனைத்துத்துறைகளின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை தெரிவிக்கின்ற வகையில் பல்வேறு கண்கவர் காட்சிகளை அமைத்துள்ளார்கள். குறிப்பாக தோட்டாக்கலைத்துறையின் சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறந்துவைக்கப்பட்ட கர்னல் பென்னிகுவிக் மணிமண்டபத்தின் மாதிரியை காய்கறிகளைக் கொண்டு நேர்த்தியாக அலங்கரித்துள்ளார்கள.; அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பிரவீண்குமார் அபினபு, இ.கா.ப. அவர்கள், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் அவர்கள், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.லாசர் அவர்கள், கம்பம் ஒன்றியக்குழுத்தலைவர் திரு.தங்க முருகன் அவர்கள், சுருளிபட்டி ஊராட்சிமன்றத்தலைவர் திரு.முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.முருகேசன் அவர்கள், கம்பம் நகர்மன்றத்தலைவர் திரு. சிவக்குமார் அவர்கள்,; மேகமலை வன உயிரின காப்பாளர் திரு.வெங்கிடசாமி அவர்கள், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.சிவ.ஜானகி அவர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர் திரு.மகாலிங்கம் அவர்கள், துணைத்தலைவர் திரு.ஆண்டி அவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எம்.ஆர்.்ஸ்வரன் அவர்கள், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் திருமதி.்ஸ்வரி பாலன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் திரு.என்.ரமேஷ், வட்டாட்சியர் திரு.தனலிங்கம் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஜீவரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஜெ.விஜயாராணி அவர்கள வரவேற்புரையாற்றினார், சுற்றுலா அலுவலர் திரு.குணசேகரன் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 3 days 18 hours ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 6 days 14 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-07-02-2023
07 Feb 2023 -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு மனு தாக்கல்
07 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார்.
-
குடிமைப்பணி தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பை தளர்த்த நடவடிக்கை எடுங்கள் : பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
07 Feb 2023சென்னை : கொரோனா பெருந்தொற்று காலத்தில், குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு, வயது வரம்பினைத் தளர்த்தும் ஒருமுறை நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி ப
-
புதிதாக தேர்வான சப் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமன ஆணை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
07 Feb 2023சென்னை : புதிதாக 444 சப் இன்ஸ்பெக்டர்கள் 17 டி.எஸ்.பி.க்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பாலியல் வழக்கில் திருநங்கைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை : திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
07 Feb 2023திருவனந்தபுரம் : முதல்முறையாக பாலியல் வழக்கில் திருநங்கைக்கு 7 ஆண்டு சிறை தண்டனையை விதித்து திருவனந்தபுரம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு இன்று வருகை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை
07 Feb 2023புதுடெல்லி : முதல்வர் மு.க.
-
ஈரோட்டில் பணம் பட்டுவாடா:தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வினர் புகார்
07 Feb 2023சென்னை : ஈரோட்டில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதானி குழும விவகாரத்தில் பார்லி.யில் 4-வது நாளாக எதிர்க்கட்சியினர் அமளி : பிரதமரே வாருங்கள் என கோஷம்
07 Feb 2023புதுடெல்லி : அதானி குழும விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நேற்று 4-வது நாளாக இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
-
நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர்: தேவநேய பாவாணர் பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
07 Feb 2023சென்னை : “நம் பணிகளுக்கு வழிகாட்டிய தமிழுணர்வாளர் தேவநேய பாவாணர்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு: நிவாரணங்களை வழங்கிய இந்தியாவிற்கு துருக்கி நன்றி
07 Feb 2023அங்காரா : நிலநடுக்கத்தால் கடும் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு துருக்கி நன்றி தெரிவித்துள்ளது.
-
மீட்புப் படை, நிவாரணப் பொருட்களுடன் துருக்கிக்கு மேலும் 2 விமானங்களை அனுப்புகிறது இந்தியா : நிலநடுக்க பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரிப்பு
07 Feb 2023புதுடெல்லி : துருக்கியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
-
சென்னை ஐகோர்ட்டில் விக்டோரியா கவுரி உள்பட கூடுதல் நீதிபதிகளாக 5 பேர் பதவியேற்றனர் : பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
07 Feb 2023சென்னை : சென்னை ஐகோர்ட்டு புதிய நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.சி.திலகவதி ஆகியோரை நிய மித்து ஜனாதிபதி திரெளபதி மு
-
தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். சந்திப்பு குறித்து கு.ப.கிருஷ்ணன் பேட்டி
07 Feb 2023சென்னை : தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பை சேர்ந்த கு.ப கிருஷ்ணன் தெரிவித்தார்.
-
நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள் : டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு
07 Feb 2023சென்னை : நவீன காலத்தில் போன் மூலமாக எல்லாவற்றையும் திருடுகிறார்கள் என்று சைபர் கிரைம் கருத்தரங்கில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
-
கோவில் யானை குளிப்பதற்கு பிரமாண்ட குளியல் தொட்டி : அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
07 Feb 2023கோவை : கோவையில் கோவில் யானை குளிப்பதற்காக பிரமாண்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
பார்டர் - காவஸ்கர் கோப்பை தொடர் நாளை தொடக்கம்
07 Feb 2023புதுடெல்லி : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது.
-
மின்இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணத்தை பிப்.15-க்கு பிறகு செலுத்த முடியாது
07 Feb 2023சென்னை : மின்இணைப்புடன் ஆதார் எண் இணைக்காவிட்டால் வரும் 15-ம் தேதிக்கு பிறகு மின் கட்டணம் செலுத்த இயலாது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது : வரும் 10-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
07 Feb 2023ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ், அ.தி.மு.க., தேமுதிக, நாம் தமிழர், உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்றுடன்
-
சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதி விக்டோரியா கவுரிக்கு எதிரான மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
07 Feb 2023புதுடெல்லி : விக்டோரியா கெளரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நேற்று பதவியேற்ற நிலையில், அவருடைய நியமனத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க முடியாது எ
-
ஏழைகளின் நலனை மையப்படுத்தியே மத்திய அரசின் பட்ஜெட்டுகள் தாக்கல் : பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் பேச்சு
07 Feb 2023புதுடெல்லி : தனது தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்த ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஏழைகளின் நலனே மையமாக இருந்தன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவை வெல்வது மிகப்பெரியது: ஸ்மித்
07 Feb 2023இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - காவஸ்கர் கிரிக்கெட் தொடர், டெஸ்ட் ஆட்டத்துடன் வியாழக்கிழமை (பிப். 9) தொடங்கவுள்ளது.
-
மகளிர் ஐ.பி.எல். தொடர்: இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு
07 Feb 2023மும்பை : ஏலத்தில் பங்கேற்க 1,525 வீராங்கனைகள் பதிவு செய்தநிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
பலி எண்ணிக்கை பன்மடங்கு உயரும் அபாயம் : துருக்கி - சிரியா நாட்டு மக்களை துயரில் ஆழ்த்திய கடும் நிலநடுக்கம்
07 Feb 2023டமஸ்கஸ் : துருக்கி - சிரிய எல்லையில் நேற்று அதிகாலை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 5,000 -ஐ கடந்துள்ளது.
-
ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்தை துவக்கிய அ.தி.மு.க. வேட்பாளர் : வரலாறு படைப்போம் என கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
07 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு படைக்கும் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
07 Feb 2023சென்னை : 120 மாணவர்களுக்கு ரூ.39 லட்சம் கல்வி உதவித் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.