முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபந்தனை அடிப்படையில் தலைவா படத்தை வெளியிட முடிவு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக. 16 - விஜய்யின் தலைவா படத்தை சில நிபந்தனைகளின் அடிப்படையில் வரும் 23 ம் தேதி வெளியிடலாம் என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 9 ம் தேதி உலகமெங்கும் வெளியாகி விட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டி.வி.டி.க் கள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கேட்டுக் கொண்டனர். 

இந்த நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் தங்கள் சங்க அலுவலகத்தில் கூடிய திரையரங்கு உரிமையாளர்கள், தலைவா படத்தை வரும் 23 ம் தேதி வெளியிடலாமா என ஆலோசித்தனர். ஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்துக்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால், விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர். 250 முத்ல 300 அரங்குகளில், சதவீத அடிப்படையில் வேண்டுமானால் தலைவா படத்தை வெளியிடலாம். மினிமம் கியாரண்டி அடிப்படையில் என்றால், படத்தை வெளியிட முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். இந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால் தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்