முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கிற்கு தப்பியோடிள்ள தாவூத் மகன் திருமணம் துபாயில் நடக்கிறது

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,மே.- 9 - பிரபல மும்பை தாதாகவும் சர்வதேச தீவிரவாதியுமான தாவூத் இப்ராஹீம் மகன் திருமணம் வருகிற 28-ம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. தாவூத் இப்ராஹீம், பின்லேடனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது கொடிய தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதையடுத்து அவனை அமெரிக்கா சுட்டுக்கொன்றுவிடும் என்று பாகிஸ்தான் கருதியது. எனவே அவனை கராச்சி நகரில் இருந்து இஸ்லாமாபாத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து முரி என்ற இடத்தில் ரகசியமாக வைத்திருக்கிறது. பின்னர் அவன், அங்கிருந்து சவூதி அரேபியாவுக்கு தப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தாவூத்தின் மகன் மொய்னுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த திருமணம் கராச்சி ஹிலிப்டன் பகுதியில் உள்ள அவனது வீட்டில் வரும் 22-ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மணமகள் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் கனடாவில் ஜவுளித்தொழில் செய்யும் ஒரு அதிபரின் மகளாவார். இந்த திருமணத்தை பாகிஸ்தானில் நடத்தினால் அந்த சமயத்தில் அமெரிக்க ராணுவம் நுழைந்து தம்மை கைது செய்துவிடுமோ என்று பயந்து திருமணம் நடக்கும் இடத்தை துபாய்க்கு மாற்றியுள்ளான் தாவூத். அங்கும் இந்த திருமணம் ரகசியமான இடத்தில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தாவூத்தின் மகள் திருமணமும் துபாயில்தான் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சர்வதேச போலீசார் கண்காணித்து வந்ததால் தாவூத் நேரடியாக திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்