முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாகூர் பெயரில் சர்வதேச விருது பிரதமர் மன்மோகன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 9 - நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திர நாத் தாகூரின் பெருமைகளை போற்றும் வகையில் சர்வதேச விருது ஒன்று ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற ரவீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாள் விழாவை தொடங்கி வைத்து பேசுகையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இவ் விழாவில் பேசிய அவர் மேலும் கூறுகையில்,
மத்திய அரசு மிகவும் பெருமை மிக்க சர்வதேச அளவிலான ஒரு விருதை ஏற்படுத்தும். விருதுக்குரியவர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக பிரதமர் இருப்பார். இக்குழு சர்வதேச அளவில் பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்களை தேர்வு செய்யும். ஆண்டு தோறும் இவ்விருது வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். 150 வது ஆண்டு பிறந்த தின விழா டெல்லியில் தொடங்கி ஓராண்டுக்கு நடைபெறவுள்ளது.
அப்போது இவ்விருதுக்குரியவர் தேர்வு செய்யப்பட்டிருப்பர். 150 வது ஆண்டு பிறந்த நாள் விழாவை இரு நாடுகள் இணைந்து கொண்டாடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தாகூரின் பெருமைகளை சர்வதேச அளவில் பிரபலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். தாகூர் பெயரில் கலாசார மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார். இரு நாடுகளும் இணைந்து இவ்விழாவை கொண்டாடுவது என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதமே திட்டமிடப்பட்டது என்றும் மத்திய கலாசாரத் துறை அமைச்சர் குமார் செல்ஜா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்