முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூஞ்ச் பகுதியில் மீண்டும் பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

பூஞ்ச், ஆக.21 - போர் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் நேற்று பாகிஸ்தான் துருப்புகள்  தாக்குகல் நடத்தின. இதையடுத்து இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் தானியங்கி மற்றும் நவீன ஆயுதங்கள் மூலம் இந்திய ராணுவ முகாம்கள் மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தின. ஹமிர்பூரில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து பாகிஸ்தான் துருப்புகள் தாக்கின. இதையடுத்து இந்திய ராணுவத்தினர் திருப்பி தாக்கினர்.

நேற்று முன்தினம் இந்த பகுதியில் ராணுவ முகாமை குறிவைத்து பாகிஸ்தான் துருப்புகள் தாக்கின. இதையடுத்து இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். பாலகோட் எல்லைப் பகதியில் உள்ள ஹமிர்பூர் பகுதியில் உள்ள ராணுவ முகாமை தாக்குவதையே அவர்கள் குறியாக இருந்தனர்.

இந்த ஆண்டில் மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் 82 முறை போர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது. இந்கிய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவம் உள்பட 24 முறை அவர்கள் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்