முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை சிறையில் 41 மீனவர்களின் காவல் மீண்டும் நீடிப்பு

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமேசுவரம்,ஆக.22 - இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த 10 படகு உள்பட41 மீனவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர்;.மீண்டும் மீனவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தின இவர்களை வரும் ஆகஸ்ட் 28ம் தேதிவரை நிறைக்காவலில் வைக்க நீதிபதி உத்திரவுயுட்டதால் சிறையில் அடைத்தனர்.இலங்கை கடற்படையினர் மீனவர்கள்ை பிடித்து சென்றால் 20 நாட்களில் விடுதலை செய்வது வழக்கமாக வைத்து இருந்தனர் ஆனால் 43 நாட்களாகியும் விடுதலை செய்யாமல் காவல் நீடிக்கப்பட்டுள்ள செய்திகளை கேட்டவுடன் மீனவ குடும்பங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்;.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தலைமன்னார், தனுஸ்கோடி கடல்பகுதியில் மீன்பிடித்து வருகின்றர் இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக படகு மற்றும் மீனவர்களை கைது செய்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி,பிளாஸ்டிக் பைப்பால் அடித்து இலங்கை காவல் நிலையத்தில் ஓப்படைக்கப்பட்டு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கின்றனர்.43 நாட்களாக இலங்கை சிறையில் இருக்கும் போஸ் அந்தோணிபிச்சை,செங்கோல்ராஜ்,லிடன்,முனியாண்டி,சூசைராஜ்,பொன்னுச்சாமி  ஆகியோர்கள் 10 படகுகள் உள்பட மீனவர்கள் முனியசாமி,ரீகன், ராமையா,கருப்பையா சுரேஸ்,பாக்கியராஜ்,சுதன் சரவணன்,சகாயம் இன்னாசி,கருப்பையா,அந்தோணிசாமி,வேலுச்சாமி,இன்னாசிலொயலா, உள்பட 41மீனவர்களை மீண்டும் நேற்று தலைமன்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.நீதிபதி ஆனந்திகனகரெத்தினம் மீனவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை செய்தனர்.இலங்கை கடற்படையினர் மற்றும் மன்னார் போலிஸ்சார்கள் மீனவர்கள் கைது செய்தது தொடர்பாக ஆவணங்கள் ஏதும் நீதிமன்றத்தில் ஒப்படைக்காத காரணத்தால் நீதிபதி மீண்டும் 7 நாட்கள் ஆகஸ்ட் 28ம் தேதி  தேதிவரை சிறைக்காவலில் வைக்க உத்திரவுயிட்டார்  49மீனவர்களை மீண்டும் அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். மீனவர்களை 43 நாட்களாகியும் விடுதலை செய்யாமல் தொடர்ந்து காவல் நீடிக்க பட்டுள்ளதால் மீனவர்களின் குடும்பங்கள் பெறும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்