முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாசலப் பிரதேசத்தில் சீனா மீண்டும் ஊடுருவல்..!

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 22 - அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த வாரம் ஊடுருவிய சீனா சில நாட்கள் முகாம் போட்டு தங்கிவிட்டுப் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 4 மாதங்களுக்கு முன்பு சீனா ஊடுருவி பல நாட்கள் முகாம் போட்டு தங்கிவிட்டுப் போனது. பின்னர் அருணாசலப் பிரதேசத்துக்குள் 30 கிலோ மீட்டர் வரை ஊடுருவியது சீனா. அருணாசலப் பிரதேசத்தின் சக்லஹம் மாவட்டத்துக்குள் ஊடுருவிய சீன படையினர் அதை தங்களது பகுதி என உரிமை கோரி பேனர் வைத்திருந்தனர். அப்போது இந்திய படையினர் ரோந்து சென்றனர். இருப்பினும் சீன ராணுவத்தினர் முகாம் அமைக்காததால் உடனே தங்களது எல்லைக்குத் திரும்பி விடுவர் என்று கூறப்பட்டது.

இருப்பினும் ஆகஸ்ட் 13 ம் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய அந்த சீன ராணுவக் குழுவினர் தொடர்ந்து 3 முதல் 4 நாட்கள்வரை முகாம் போட்டு தங்கி விட்டுத் திரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்