முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மோசடி மன்னனுக்கு தி.மு.க.வினருடன் தொடர்பா?

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம்,மே.- 9 - மதுரை மோசடி மன்னனுக்கு தி.மு.க.வினருடன் தொடர்பு உள்ளதா என தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.  தமிழகம் மட்டுமல்லாது, புதுச்சேரி, பெங்களூர் உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசு வேலை, வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும், குறைந்த விலையில் தங்க கட்டிகள் வாங்கி தருவதாகவும் கூறி மதுரை மோசடி மன்னன் விவேகானந்தன் மற்றும் அவரது மனைவி பிருந்தா, மைத்துனர் கெவின் ஆகியோர் ரூ. பல கோடிகளை மோசடி செய்தனர். பல பகுதிகளிலும் கைவரிசை காட்டி வந்த விவேகானந்தன் குடும்பத்தினர் இறுதியாக மதுரை மாவட்டம் திருநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாடகை வீட்டில் குடியேறினர். அப்பகுதிகளிலும் ஏராளமானோரிடம் பல லட்சம் ரூபாயை மோசடி செய்து கடந்த மார்ச் மாதம் தலைமறைவாயினர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர். கடந்த 1 ம் தேதி கோவாவில் கைது செய்யப்பட்ட விவேகானந்தன் போலீசாருக்கு அல்வா கொடுத்து விட்டு தப்பியோடி விட்டார். அப்படியிருந்தும் அவர் தெரிவித்திருந்த தகவலின் பேரில் ரூ. ஒன்றேகால் கோடி ரொக்கப் பணமும், ஒன்றே கால் கிலோ தங்க பிஸ்கெட்டுகளும், 3 சொகுசு கார்களும், ஒரு சொகுசு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரையில் பதுங்கியிருந்த விவேகானந்தனின் மனைவி பிருந்தாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணமும், 94 பவுன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
திருநகரை விட்டு ஓடிய விவேகானந்தன் குறித்து அவரிடம் ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்தனர். அப்போது போலீசார் அவர்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 23.4.2011 அன்று திருநகர் போலீசார் தனக்கன்குளம் பகுதியில் விவேகானந்தன் ரூ. 2 லட்சத்திற்கு விற்பனை செய்த ஆடி காரை பறிமுதல் செய்தனர். மறுநாள் கம்பம் பகுதியில் ரூ. 2 லட்சத்திற்கு விற்பனை செய்த போர்டு காரையும், 26 ம் தேதி ஸ்கார்பியோ காரையும் திருநகர் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கார்கள் அனைத்தும் பல லட்சம் மதிப்புள்ளது. இதில் கம்பம் பகுதியில் கைப்பற்றப்பட்ட போர்டு காரின் பின்புறம் கம்பம் ஆனஸ்ட்ராஜ் என எழுதப்பட்டிருந்தது. இதனால் ஆனஸ்ட்ராஜ் என்பவர் தி.மு.கவை சேர்ந்தவரா என ஏற்கனவே போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தவிர ஏராளமான தி.மு.க பெரும்புள்ளிகள் விவேகானந்தனிடம் தொடர்பு வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விவேகானந்தனுக்கு தி.மு.கவினரிடையே தொடர்பு இருந்ததா என்றும் விவேகானந்தன் மோசடிக்கு அவர்கள் உடந்தையாக இருந்தனரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago