முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடாததற்கு நன்றி!

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.24 - தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடாததற்கு நன்றி என்று வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழ் இனப்படுகொலை செய்த  கூட்டுக்குற்றவாளிகள் தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொள்ள சிங்கள பேரினவாத அரசின் பேருதவியுடன் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்ட ``மெட்ராஸ் கபே' திரைப்படம் வெளியிடக்கூடாது என கொந்தளிக்கும் உணர்வுடன் விடுத்த வேண்டுகோளை ஏற்று நேற்று (23.08.2013) வெளியிடுவதாக இருந்த திரைப்படம் திரையிடப்படவில்லை.

தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் இப்படத்தை திரையிட இயக்குனரும்,  தயாரிப்பாளரும் பலவகையில் முயற்சி செய்து இலாபத்தில் பங்கு தருவதாக ஆசை வார்த்தை கூறியபோதும் தமிழர்களின் உரிமைகளுக்காக சுயநலமின்றி போராடும் எங்களின் வேண்டுகோளை ஏற்று தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மெட்ரோ கபே திரைப்படத்தை திரையிடாமல் ஒத்துழைப்பு நல்கியிருக்கின்ற திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகறூதர்களுக்கும், திரையுலத்தினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்