முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவேன்: யுவராஜ் சிங்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக. 26 - இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்புவேன், சர்வதேச போட்டிகளில் பங்கேற்பேன் என்று அதிரடி வீரரான யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்தார். மோசமான பார்ம் காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சிங், கிரிக்கெட் மீது தான் வைத்து இருக்கும் அளவு கடந்த ஆர்வம் தனக்கு ஊக்க சக் தியாக உள்ளது என்றும் கூறினார். இந்திய அணியின் சிறந்த அதிரடி வீரர்க ளில் ஒருவரான யுவராஜ் சிங் கடந்த வருடம் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் அமெரிக்காவில் சிகிட்சை எடுத்துக் கொண்டார். 

அதன் பின்பு சில மாத இடைவெளிக் குப் பிறகு இந்திய அணியில் சிங் ஆடி னார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போ  ட்டிகளில் கலந்து கொண்டார். 

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவர து ஆட்டம் அமையவில்லை. குறைந்த ஸ்கோரிலேயே ஆட்டம் இழந்தார். அவரது மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியன் பிரீமியர் லீக் போட்டியிலும் பஞ்சாப் வீரரான யுவராஜ் சிங் கலந்து கொண்டார். ஆனால் அதிலும் அவரா ல் பிரகாசிக்க முடியவில்லை. 

தற்போது இந்திய அணியில் கடும் போட்டி நிலவுகிறது. பேட்டிங் மற்றும் பெளலிங்கில் இளம் வீரர்கள் இடம் பெற்று கலக்கி வருகின்றனர். 

யுவராஜ் சிங் போல இந்திய அணியின் மற்ற முன்னணி வீரர்களான வீரேந்தர் சேவாக் மற்றும் காம்பீர் ஆகியோரும் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர். 

இந்திய அணியில் ஷிகார் தவான், புஜாரா, ரோகித் சர்மா ஆகியோர் பே ட்டிங்கிலும், புவனேஷ்வர் குமார் மற் றும் மொகமது ஷமி ஆகியோர் பந்து வீச்சிலும் கலக்கி வருகின்றனர். 

டெல்லி வீரரான ஷிகார் தவான் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கலக்கி வருகிறார். ஒரு நாள் மற்றும் டி - 20 யில் ரோகித் சர்மாவுடன் இணைந் து சிறப்பாக ஆடி வருகிறார். 

டெஸ்ட் போட்டியில் புஜாராவுடன் இணைந்து பிரகாசித்து வருகிறார். தவானின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை யைக் கைப்பற்றியது. 

அதே போல இளம் வீரரான புவனேஷ் வர் குமார் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தனது ஸ்விங் பந்துகளி ன் மூலம் எதிரணியை திணற வைத்து வருகிறார். அவருக்கு ஆதரவாக மொக மது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகி யோர் உள்ளனர். 

டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பே ட்டியின் போது இடது கை பேட்ஸ்மே னான யுவராஜ் சிங் மேற்கண்ட தகவ லை தெரிவித்து இருக்கிறார். 

இது குறித்து அவரிடம் கேட்ட போது, இந்திய அணியில் மீண்டும் இடம்பெறு வேன், சர்வதேச போட்டிகளில் பங்கே ற்பேன் என்றார் அவர். 

மேலும், கிரிக்கெட் மீது நான் அளவு கடந்த ஆர்வத்தை வைத்து இருக்கிறே ன். இதுவே எனக்கு ஊக்க சக்தியாக உள்ளது. உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு திரும்பு வேன். எனது திறமையை நிரூபிப்பேன் என்றும் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்