முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்மிண்டன்: டோக் பெருமாட்டி கல்லூரி அணி சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஆக. 26 - மதுரை காமராஜர் பல்கலைக் கழக மகளிர் கல்லூரி மாணவியருக்கு இடையேயான பாட்மிண்டன் போட்டியில் டோக் பெருமாட்டி கல்லூரி அணி ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி மாணவியருக்கு இடையேயான பாட்மிண்டன் போட்டிகள் பல்கலைக் கழக உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 12 கல்லூரிகளின் மாணவியர் அணிகள் பங்கேற்றன. அரையிறுதி போட்டிகளுக்கு மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி அணி, மதுரை பாத்திமா கல்லூரி அணி, யாதவர் மகளிர் கல்லூரி அணி, விருதுநகர் வி.வி.வி. கல்லூரி அணிகள் தகுதி பெற்றன. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் டோக் பெருமாட்டி கல்லூரி அணியும், பாத்திமா கல்லூரி அணியும் மோதின. ஒற்றையர் ஆட்டத்தில் டோக் பெருமாட்டி கல்லூரி அணி மாணவி பெர்சிஸ், எதிர்த்து விளையாடிய பாத்திமா கல்லூரி மாணவி ஆனந்தியை தோற்கடித்தார். இரட்டையர் ஆட்டத்தில் டோக் பெருமாட்டி கல்லூரி அணி மாணவியர் பெர்சிஸ் மற்றும் நிஷா ஜோடி எதிர்த்து விளையாடிய பாத்திமா கல்லூரி அணி மாணவியர் ஆனந்தி மற்றும் சுஜிரா ஜோடியை வெற்றி பெற்றது. 

இரட்டையர் ஆட்டத்தில் இ.எம்.ஜி. யாதவர் கல்லூரி மாணவியரும் வென்றனர். இறுதி போட்டியில் ஒற்றையர் ஆட்த்தில் டோக் பெருமாட்டி கல்லூரி வென்றது. இரட்டையர் ஆட்டத்தில் டோக் பெருமாட்டி கல்லூரியே வென்றது. இதைதொடர்ந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற டோக் பெருமாட்டி கல்லூரி அணிக்கு சிவகாசி சுனார்க் அலுமினியம் இண்டஸ்ட்ரிஸ் விருது வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்