முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்த 6 பேர் கைது

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, மே 10 - காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு சப்ளை செய்த 6 பேரை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர். காஷ்மீருக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடிக்கடி ஊடுருவி வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றனர். சில தீவிரவாதிகளுக்கு காஷ்மீரில் உள்ளவர்களே உதவியும் செய்து வருகிறார்கள். இது கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. 

பூஞ்ச் மாவட்டத்தில் சிலர் தீவிரவாதிகளுக்கு ஜம்முவைச் சேர்ந்த சில செல்போன் சிம்கார்டுகளை சப்ளை செய்திருப்பதா ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு நகரில் உள்ள சுரண்கோட், மென்தார் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தீவிரவாதிகளுக்கு சிம் கார்டு வழங்கியதாக 6 பேரை அதிரடி போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் அண்ணன் தம்பிகள். இவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்