முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரஞ்சீவி நாக்கை அறுப்போம்: சந்திரசேகரராவ் மருமகன்

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

நகரி, ஆக.27 - ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று கூறும் சிரஞ்சீவி நாக்கை அறுப்போம் என்றுதெலுங்கானா போராட்ட குழு தலைவர் சந்திரசேகரராவின் மருமகனும் எம்.எல்.ஏயுமான ஹரீஸ்ராவ்  ஆவேசமாக கூறியுள்ளார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர, ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு தீர்வுகாண ஐதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சிரஞ்சீவி உள்பட பலர் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்து உள்ளனர்.

ஆனால் இதற்கு தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஐதராபாத் தெலுங்கானாவுக்கே சொந்தம். அதனை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திர சேகரராவ் எச்சரித்து உள்ளார். இதற்கிடையே ஐதராபாத்தில் காந்தி ஆஸ்பத்திரி அருகே தெலுங்கானா போராட்டத்துக்குழு சார்பில் அமைதி உண்ணாவிரதம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி எம்.எல்.ஏ.வும், சந்திரசேகரராவ் மருமகனுமான ஹரிஸ்ராவ் கூறியதாவது:-

ஐதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக யார் அறிவித்தாலும் அவர்களின் நாக்கை தெலுங்கானா மக்கள் அறுத்து எறிவார்கள். சிரஞ்சீவி உள்பட யாராக இருந்தாலும் அனைவருக்கும் இது பொருந்தும்.எனவே இவ்வாறு யாரும் பேச வேண்டாம். ஐதராபாத் தங்களுக்கு சொந்தம் என்று யார் கூட்டம் நடத்தினாலும் எங்களது விஸ்வரூபத்தை காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்