முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிக்கெட் பரிசோதகரை தாக்கிய மலையாள நடிகர் கைது

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

ஈரோடு, ஆக.27-ஈரோடு வந்த  ரயிலில்  டிக்கெட் பரிசோதகரை தாக்கிய மலையாள வில்லன் நடிகர்  கைது கேரளா மாநிலம் பத்தினம் திட்டா   பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் நாயர் (வயது 50) இவர் சூரியவனம்,காந்தியன்  உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மனோஜ் குமார் தற்போது சென்னையில் இயக்குனர் பீரவின்  டைரக்சனில் புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இநத படத்தின் பூஜையில் கலந்து கொண்ட மனோஜ் குமார் சென்னையில் இருந்து கடந்த ஞாயிறு (25-8-13)அன்று இரவு திருவனந்த புரத்திற்கு சென்னை திருவனந்த புரம் எக்ஸ்பிரசில் பயணம் செய்துகொண்டுடிருந்தார். ரயில் சேலம் வந்த போது காத்திருப்போர் பெட்டியில்  பயணிகளும் ஏரியதாக கூறப்படுகின்றது. நடிகர் மனோஜ்குமார் இது குறித்து சென்னையை சேர்ந்த பரிசோதகர் கிருஷ்ண மூர்த்தியிடம்  முன் பதிவு பெட்டியில் பதிவு செய்யாத பயணிகளை எப்படி பயணம் செய்ய அனுமதிக்கலாம் என கேட்டுள்ளார். இதில் வாய்தகராறு முற்றி பரிசோதகர் கிருஷ்ண மூர்த்தி தலையில் நடிகர் மனோஜ்குமார் கையால் தாக்கியதாக கூறப்படுகின்றது.  இதை தொடர்ந்து இரவு 1 .20 மணிக்கு ரயில் ஈரோடு வந்த போது பரிசோதகர்கிருஷ்ண மூர்த்தி ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சேர்ந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீசில்  புகார் செய்யப்பட்டது.அந்த புகாரில் தன்னை மலையாள பட வில்லன்  நடிகர் தாக்கியதாக தெரிவித்தார். இந்த புகாரில்  பேரில்  ரயில் வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் நடிகர்  மனோஜ் குமாரை  கைது செய்தார்.இந்த விவகாரத்தில் மனோஜ் குமாரும் தன்னைபரிசோதகர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் 5 பேர் தன்னை தாக்கியதாக  கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்