முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக் மோசடி: டைரக்டர் கஸ்தூரி ராஜா மனு தள்ளுபடி

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2013      சினிமா
Image Unavailable

சென்னை, ஆக. 27 - 65 லட்ச ரூபாய் செக்மோசடி வழக்கில் இயக்குனர் கஸ்தூரி ராஜா தாக்கல் செய்த மனுவை சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட் செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டில் சினிமா டைரக்டர் கஸ்தூரி ராஜா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ககன் கோத்ரா என்பவர் என் மீது 65 லட்சம் ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மனுவில் முகுல் சந்த் கோத்ராவிடம் தான் 65 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவருக்கு பதில் தான் இந்த வழக்கை தொடருவதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பவர் ஏஜெண்டாக செயல்பட்டு என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, செக் மோசடி வழக்கில் இதுபோன்று பவர் ஏஜெண்டுகள் மனுதாரராக செயல்பட முடியும். எனவே கஸ்தூரி ராஜா மனுவை தள்ளுபடி செய்கிறேன் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்