முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு ஜாமீன்

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஆக. 29 - கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் பொருத்தி தருவதாக கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், டி.வி. நடிகை ஷாலு மேனன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஷாலுமேனனுக்கு சமீபத்தில் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பாபுராஜன் என்பவர் தன்னிடமும் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சரிதா நாயரும், பிஜு ராதாகிருஷ்ணனும் பத்தனம் திட்டா முதலாவது மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. மனுவை விசாரித்த கோர்ட்டு, சரிதா நாயருக்கும் பிஜு ராதாகிருஷ்ணனுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் இவர்கள் மீது மேலும் பல வழக்குகள் இருப்பதால் அவர்களால் சிறையிலிருந்து வெளியே வர முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்