முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்கள் தாகம் தீர்க்க விஜயாந்த் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.11 - கோடைகாலத்தையொட்டி குடிநீர், மோர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்க விஜயகாந்த் தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோடை காலம் என்றாலே கொளுத்தும் வெயில்தான் நினைவுக்கு வருகிறது. 

இந்த ஆண்டு என்றும் இல்லாத அளவிற்கு ஆரம்பத்தில் இருந்தே வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. வெந்த புண்ணில் வேலை எறிவதைப் போல, ஏற்கனவே நொந்து போய் உள்ள மக்களுக்கு மின்வாரியம் அமல்படுத்தும் மின்வெட்டு தாங்க முடியாத துயரத்தை தந்து வருகிறது. குடிக்க தண்ணீர் முதல் இரவு படுத்துத் தூங்க மின்விசிறி வரை இன்று மின்சாரம் இன்றியமையாத தேவையாக இருந்து வருகிறது. இந்த கோடை காலம் எப்பொழுது முடியுமோ என்ற ஏக்கம்தான் இன்று மக்களிடம் மேலோங்கி உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கோடை காலத்தின் கொடுமையை தவிர்க்க நம்மால் இயன்ற நற்பணிகளை ஆண்டுதோறும் நாம் செய்து வருகிறோம். மக்களுக்கு உதவிட தண்ணீர் பந்தல்கள் அமைத்து நல்ல குடிதண்ணீர், நீnullர்மோர், பானகம், போன்ற தாகம் தணிக்கும் வசதிகளை செய்வது வாடிக்கையாகும். அதற்கொப்ப இந்த ஆண்டும் தே.மு.தி.க. சார்பில் கழகத் தோழர்களும், கழக அணியினரும், ஆதரவாளர்களும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து முறையாக அவை செயல்பட வழி வகுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். மக்கள் பணியே மகேசன் பணி என்ற உணர்வோடு கழகத் தோழர்கள் இந்த எனது வேண்டுகோளை தலையாய பணியாகக் கருதி உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்