முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப் மீது புதிய கொலை வழக்கு பதிவு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப். 4 - பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் மீது 2007-ஆம் ஆண்டு லால் மஸ்ஜித் (சிவப்பு மசூதி) நடவடிக்கையின்போது மதத்தலைவர் அப்துல் ரஷீது மற்றும் அவரது தாயைக் கொன்றதாக, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

70 வயதாகும் முஷாரப் மீது அப்துல் ரஷீதின் மகன் ஹாரூன் ரஷீது அளித்த புகாரின்பேரின் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து முஷாரப்பின் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த காசிம் நியாஜி கூறுகையில், இந்த வழக்கைக் கண்டு முஷாரப் அஞ்சப்போவதில்லை. இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டிருக்கும் இந்த வழக்கில் முஷாரப் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் வரை போராடுவோம் என்று கூறினார். முன்னதாக, கடந்த ஜூலை 12 ம் தேதி, இதே நீதிமன்றம் லால் மஸ்ஜித் நடவடிக்கைக்காக முஷாரப் மீது குற்றச்சாட்டை பதிவு செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தங்களது சட்டத்துறையை கலந்து ஆலோசித்த பின்னரே குற்றச்சாட்டை பதிவு செய்ய முடியும் என்று காவல்துறை மறுத்து விட்டது.

இந்நிலையில், முஷாரப் மீது வழக்கை பதிவு செய்த நீதிபதி நூருல் குரேஷி, நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாத காவல்துறையை கண்டித்தார். 2007 ம் ஆண்டு முஷாரப் ஆட்சியின் போது இஸ்லாமாபாத்தில் மத அடிப்படைவாதிகள் பிணைக் கைதிகளுடன் தங்கியிருந்த லால் மஸ்ஜித்தில், ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தானிய ராணுவத்தினர், மதப்பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 100 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே, முஷாரப் மீது பேனசீர் பூட்டோ, அக்பர் புக்டி ஆகியோரைக் கொன்றதாக இரண்டு கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்