முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்மரம் கடத்த முயன்ற சீன வாலிபர்கள் 3 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.7 - சென்னையில் இருந்து பாங்காங் செல்லும் தனியார் விமானப் பயணிகள் உடமைகள் பரிசோதனை செய்யப்பட்டன. 3 வாலிபர்களின் சூட்கேசை சோதனை செய்த போது அதில் செம்மரக் கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் 3 பேரும் சீன நாட்டை சேர்ந்தவர்கள். 3 பேரின் சூட்கேசில் இருந்தும் 150 கிலோ செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மருந்துக்காக அவற்றை இங்கிருந்து கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் அவர்கள் அதனை கொண்டு செல்ல உரிய அனுமதி பெறாததால் அவற்றை எடுத்துச்செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சீன வாலிபர்கள் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்