முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாதுமணல் கொள்ளையை தடுக்க முதல்வர்களுக்கு கடிதம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.11 - தாதுமணல் கொள்ளையை தடுக்க அனைத்து மாநில முதல்-அமைச்சர் களுக்கும் கடிதம் எழுதப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறினார். மத்தியஅமைச்சர் ஜெயந்தி நடராஜன் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடற்கரையோரங்களில் தோரியம்'' என்னும் தாதுமணல் கடத்தப்படுவது குறித்து அனைத்து மாநில முதல்வர்களும் நிரந்தர தீர்வு காண வழிவகை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து எல்லா மாநில முதல்-அமைச்சர்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறேன்.

ஈழத்தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் கூறிய கருத்து அவரது சொந்த கருத்தாகும். சத்தியமங்கலம்-மைசூர் இடையே ரெயில் போக்குவரத்திற்கு அனுமதி இல்லை, அந்த பாதையில் அனுமதித்தால் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல்கள் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்