முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கந்து வட்டி கேட்டு மிரட்டும் ரவுடி கும்பல்: நடிகை புகார்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, செப்.11 - கந்து வட்டி கேட்டு ரவுடி கும்பல் மிரட்டி வருவதாக சினிமா நடிகை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

அங்காடித் தெரு, பரதேசி, நாடோடிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்த துணை நடிகை கவுரி என்ற சிந்து (வயது 33). இவர் விருகம்பாக்கம் ஓட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து நேற்று மதியம் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த அவரிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். அவரை தண்ணீர் தெளித்து பெண் போலீசார் ஒரு இடத்தில் அவரை அமர வைத்தனர்.  பின்னர் அவர் போலீஸ் கமிஷனரிடம்

அளித்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:- ஐ.நா. என்ற பெயரில் திரைப்படம் எடுக்க புரசைவாக்கம் தாணா தெருவைச் சேர்ந்த சாந்தி, அம்லு, ்ஸ்வரி, சுகந்தி, குட்டிமா என்ற வசந்தா ஆகியோரிடம் 4 லட்சம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்தேன். வட்டியை ஒழுங்காக செலுத்தி வந்தேன். வாங்கி பணத்திற்கு அதிகமாகவே பணத்தை செலுத்திவிட்டேன். 

இந்த நிலையில் படத்தின் இணை தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இதனால் படம் தாமதமாகி வருகிறது. என்னால் வட்டி செலுத்த முடியவில்லை. இதையடுத்து 4 பேரும் என்னை தொலைபேசியிலும் நேரிலும் வந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அயனாவரத்தில் உள்ள எனது சகோதரி வீட்டிற்கு சென்று மோசமாக நடந்து கொள்கிறார்கள். என் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவளை கடத்திச் சென்று கொலை செய்து விடுவதாகவும் என் மீது ஆசிட் வீசப் போவதாகவும் மிரட்டி வருகிறார்கள். இதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளச்சலால் கடந்த 6-ந்தேதி தற்கொலை முயற்சி மேற்கொண்டேன். இதையடுத்து என்னை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனைக்கும் வந்து ரவுடி கும்பல் என்னை மிரட்டி வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கந்து வட்டி கும்பல்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்