எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.11 - டில்லியில் நடைபெற்ற மின்துறை அமை ச்சர்கள் மாநாட்டில் தமிழக மின்திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்காமல் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டி உள்ளார். மாநில மின்சாரத் துறை அமைச்சர்களின் மாநாடு டெல்லியில் நேற்றுறு காலை நடந்தது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பங்கேற்று உரையாற்றினார். தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்ற முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டு வரும் திட்டங்களை அவர் பட்டியலிட்டுக் காட்டினார். தமிழ்நாட்டின் மின்சார திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல், மத்திய அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் இந்த தமிழக மின் திட்டங்களுக்கு கோரும் நிதிஉதவியை வழங்காமல் மவுனம் சாதித்து வரும் மத்திய அரசின் போக்குக்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். டெல்லியில் மின்சாரத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:-'பல்வேறு மாநிலங்கள்- யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மின்சாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றிருக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டின் மின்சக்தி சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக பேசுவதற்கு எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்திருக்கும் முதல்வர் புரட்சித் தலைவிக்கு என் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2011-ம் ஆண்டு மே மாதம் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்றார். அப்போது முந்தைய அரசின் (திமுக) தவறான நிர்வாகம் காரணமாக பெருமளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு இருந்தது.
மின் பற்றாக்குறையைப் போக்க உறுதியான, அதிரடி நடவடிக்கைகளை எடுக்க, கிடைக்கும் மின்சார அளவை உயர்த்த மின்சாரத்தை கூடுதலாக வாங்க தீவிர முயற்சிகளில் 2 ஆண்டுகளில் இறங்கினார். அண்ணா தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றபோது மாநிலத்தின் மின்சார உபயோகம் கடுமையான தட்டுப்பாட் டில் இருந்தது. அதே நேரம் மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியிலும் இருந்தது.
ரூ.19,155 கோடி ஒதுக்கீடு 'டான்ஜெட்கோ' எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகத்துக்கு முதலமைச்சர் ரூ.19 ஆயிரத்து 155 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார். அரசிடமிருந்து நிதி உதவி பெறப்பட்டிருப்பதில் இதுவே மிக உயர்ந்த பட்ச அளவாகும். தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் புதிய அனல் மின் நிலையங்கள் இயக்கி வைக்கும் நிலைக்கு வந்துள்ளன. 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலைய திட்டம், நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தித்திறன் அளவை ஏற்கனவே எட்டி இருக்கிறது. இந்த மின் திட்டம் இந்த மாதம் இறுதியில் இயக்கி வைக்கப் படும். வடசென்னை அனல் மின் நிலைய திட்டத்தின் 2 பிரிவுகளும் (ஒவ்வொன்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது) விரைவில் இயக்கப்பட உள்ளது.
சென்னைக்கு அருகில் வல்லூரில் தேசிய மின் சக்தி நிலையத்தோடு இணைந்து கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள எங்களது 2 மின் திட்டங்களும் (ஒவ்வொன்றும் 500 மெகா வாட் மின் உற்பத்தி திறனுடன்) ஏற்கனவே இயக்கி வைக்கப்பட்டு உள்ளன. 5 சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையம் தமிழக முதல்வரின் அறிவுரைக் கிணங்க ஒவ்வொன்றும் 660 மெகா வாட் மின் உற்பத்தித் திறனுடன் மொத்தம் 7300 மெகாவாட் மின் உற்பத்தித்திறனுக்கான 5 சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையங்களுக்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. தவிர, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உப்பூர் என்னுமிடத்தில் ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி திறனுடன் 1600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சூப்பர் கிரிட்டிக்கல் அனல் மின் நிலையத்தையும் டான்ஜெட்கோ நிறுவனம் உருவாக்கி வருகிறது. தவிர 2013 ஜூன் மாதத்திலிருந்து நடுத்தர கால மின்சாரம் கொள்முதல் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரத்தை டான்ஜெட்கோ நிறுவனம் கொள்முதல் செய்கிறது. மேலும் 2014-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதியிலிருந்து 1208 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்வதற்கென டான் ஜெட்கோ நிறுவனம் வெற்றிகரமாக நீண்ட கால மின்சாரம் கொள்முதல் ஒப்பந்தங்களிலும் கையெழுத் திட்டுள்ளது. தவிர, தமிழ்நாடு மின்சாரம் ஒழுங்கு முறை கமிஷனின் அங்கீகாரத்தோடு 2122 மெகாவாட் மின்சாரத்தை 15 ஆண்டு காலத்துக்கு கொள்முதல் செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தங்களை செய்து கொள்ளவும் டான்ஜெட்கோ நிறுவனம் உத்தேசித்துள்ளது. இத்தகைய முக்கிய நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்நாட்டில் தற்போதுள்ள மின்சாரப் பற்றாக்குறை அடியோடு களையப்படும்; மேலும் 12-வது திட்ட காலத்துக்கான எதிர்காலத் தேவைக்கு மின் உற்பத்தியில் நல்ல வளர்ச்சி காணப்படும் என்று உறுதியாக நம்புகிறோம். காற்றாலை மின்சாரத்தில் முன்னணி 7000 மெகாவாட்டுக்கும் மேலான உற்பத்தித் திறனுடன் காற்றாலை மின்சாரம் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில், வழிகாட்டியாக இருந்து வருகிறது. 3 ஆண்டுகளில் 3000 மெகா வாட் என்ற மகத்தான இலக்குடன் மாநிலத்துக்கான சூரிய சக்தி கொள்கை 2012-ஐ முதல்வர் வெளியிட்டிருக்கிறார். இதன்படி, நாட்டில் முதல்முறையாக 1000 மெகா வாட் உற்பத்தித் திறனுக்காக சூரிய சக்தி திட்டத்தை அமைக்குமாறு டான்ஜெட்கோ நிறுவனம் கோரப்பட்டு உள்ளது.
698 மெகாவாட் உற்பத்தித் திறனுக்காக சூரிய சக்தி நிலையம் அமைக்க 'சோலார் டெவ்லப்பர்ஸ்' நிறுவனத்துக்கு இசைவுக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வழங்கும் நிதி ஊக்கச் சலுகை மான்யத்துக்கு அதிகமாக, கூரைகளில் சூரிய சக்தி சாதனங்களை பொருத்துவதை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு கூடுதல் மான்யம் அளித்து வருகிறது.
காற்றாலை மின் சக்தியை பெருமளவுக்கு கொள்முதல் செய்யும் நிறுவனம் டான்ஜெட்கோ. இதற்கு முதலீடு பெருமளவு என்றாலும் காற்றாலை மின் சக்தியை கொண்டு செல்வதற்கு ரூ.3774 கோடி செலவில் தேவையான கட்டமைப்பு வசதியை உருவாக்கி வருகிறது. காற்றாலை மின் சக்தியைக் கொண்டு செல்வதற்கு அவசியமான கட்டமைப்பு வசதியை உருவாக்கி தருவதற்காக நிதி உதவி அளிக்குமாறு நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கையை உடனடியாக மத்திய அரசு ஏற்காமல் இருப்பது- எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தேசிய தூய்மை எரிசக்தி நிதியிலிருந்து ( 'நேஷனல் க்ளீன் எனர்ஜி பண்ட்' அமைப்பிலிருந்து) நிதி உதவி அளிக்குமாறு எங்களின் கோரிக்கையையும் மத்திய அரசு ஏற்க வில்லை.மரபு சார் மின்சக்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் காற்றாலை மின் சக்தி அல்லது சூரிய மின்சக்தியைக் கொண்டு செல்ல யூனிட் ஒன்றுக்கு கட்டணம் 4 லிருந்து 5 மடங்கு அதிகம். ஆகவே மத்திய அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்து நேஷனல் க்ளீன் எனர்ஜி பண்ட் நிறுவனத்திடமிருந்து தேவையான உதவியைப் பெற வழி வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களும் நீண்ட காலத்துக்கு முன்னதாகவே மின் மயமாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி, வனப்பகுதிகளில் 98 குடியிருப்புகளுக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இவற்றுக்கு சூரியசக்தி மூலம் மின்சாரம் வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. வீடுகள் அனைத்துக்கும் மின்சார வசதி அளிக்க வேண்டும் என்று திட்டமிட்டு அரசு செயலில் மும்முரமாக இறங்கி உள்ளது.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
அமைச்சருடன் தமிழக உயலர் அதிகாரிகளும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.