முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.70 க்காக ரூ.50,000 பறிகொடுத்த வாலிபர்

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர், மே.11 - மேலூர் செக்கடி ஐ.ஓ.பி வங்கியிலிருந்து ரூ.50,000 எடுத்து வந்தவரை பின் தொடர்ந்து கீழே ரூ.70ஐ போட்டுவிட்டு இந்த பணம் உங்களுடையதா என்று சொல்லிவிட்டு செல்வதை போல சென்று கீழே கிடந்த ரூ.70 பார்த்து திரும்புவதற்கு வண்டியில் இருந்த ரூ. 50,000நூதன முறையில் திருடப்பட்டது.

மேலூர் அருகே நயத்தான்பட்டியை சேர்ந்த ஜெயபிரகாஷ் துபாயில் பணிபுரிந்து அங்கு சம்பாதித்த பணத்தை குருவி சேர்த்தது போல் சேர்த்து வைத்துள்ளார். 3 மாதத்திற்கு முன்வந்தவர் தன் சொந்த வீட்டில் புது அடுப்படி கட்ட பணம் எடுத்து வந்துள்ளார். இதனை கண்காணித்து பின்தொடர்ந்த மர்ம ஆசாமிகள் அவரிடம் நாதனமுறையில் கைவரிசையை காட்டி பணத்தை திருடிச்சென்றனர். பணம் திருடு போனதில் அதிர்ச்சி அடைந்த அவர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குபதிவு செய்து திருடியவனை தேடிவருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்