முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா குடிநீர் திட்டம்: முதல்வர் தொடங்கி வைததார்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.16 - அண்ணாவின் பிறந்தநாளையொட்டி ``அம்மா குடிநீர்'' உற்பத்தி நிலையத்தை நேற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஏழைகள் நலன் கருதி பொதுவிநியோக திட்டத்தின் மூலம் ரேஷன்கடைகளில் விலையில்லா அரிசி, குறைந்த விலையில் துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் போன்ற உணவு பொருட்களை முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல் சென்னை மாநகராட்சி பகுதியில் ''அம்மா உணவகம்'' என்ற பெயரில் உணவகத்தை முதல்-அமைச்சர் தொடங்கினார். இதில் பொதுமக்களின் வரவேற்பு அதிகம் இருந்ததால் மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் அம்மா உணவகத்தை தொடங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். பொதுமக்கள் ஆதரவுடன் அம்மா உணவகம் சிறப்பாக நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து காய்கறி விலைகளை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 31 ''பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள்'' மலிவு விலை காய்கறி கடைகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார்.காய்கறிகள் உற்பத்தியாகும் பகுதிகளிலிருந்து மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, குறைந்த விலையில் சென்னையில் விற்பனை செய்யப்பட்டன. இதற்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் இந்த திட்டமும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. 

அம்மா குடிநீர்  

முதலமைச்சர் ஜெயலலிதா பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான நேற்று (15.9.2013) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி  சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா குடிநீர்  உற்பத்தி நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து, பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன் பெறும் வகையில் அம்மா குடிநீர்  விற்பனையைத் துவக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம் வருமாறு:-

பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் அம்மா குடிநீர்  உற்பத்தி  நிலையங்கள் பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 15.9.2013 அன்று திறந்து வைக்கப்பட்டு, அன்றைய தினமே விற்பனையும் துவங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா 21.6.2013 அன்று அறிவித்தார்.

அதன் முதற்கட்டமாக, திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் 2.47 ஏக்கர் பரப்பளவில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக, சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் அம்மா குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 1 லிட்டர் அளவு பிளாஸ்டிக் பாட்டில்களாக நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களிலும், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் பாட்டில் ஒன்று 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். 1 லிட்டர் குடிநீர்  பாட்டில்  ரயில்வே நிர்வாகத்தால் 15 பொய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 பொய்க்கும் விற்கப்படும் நிலையில், அம்மா குடிநீர் குறைந்த விலையான 10 ரூபாய்க்கு விற்கப்படுவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக மேலும் 9 இடங்களுக்கு படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான நேற்று (15.9.2013) திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி  சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா குடிநீர்  உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அம்மா குடிநீர் விற்பனையைத் துவக்கி வைத்ததன் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு  பாட்டில் அம்மா குடிநீரை 10 பொய் செலுத்தி போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதோடு 7 பயணிகளுக்கு அம்மா குடிநீர் பாட்டில்களை வழங்கினார்கள்.  

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருழணன், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் பிராஞு கிஷோர் பிரசாத், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ரங்கராஞு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago