முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதிஉதவி

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.17- பல்வேறு நிலைகளில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர்  பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி நகரத்தை சேர்ந்த கோபால்சாமி என்பவரின் மகன்  முருகன் 3.8.2013 அன்று பூலாம்பட்டி கிராமம், மேலாப்பாறை அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;                 

தஞ்சாவூர் நகரம், ்ஸ்வரி நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன்  கார்த்திக் சரவணன் மற்றும் ராஜதுரை என்பவரின் மகன்  ராஜராஜன் ஆகிய இருவரும் 4.8.2013 அன்று தென்பெரம்பூர் கிராமம்,  வெண்ணாற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன்  செல்வன் அருண்குமார்  4.8.2013 அன்று மேட்டூர் அணை அருகே குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பொன்மலை வட்டம், ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த ரங்கராஜ்ஞு என்பவரின் மகன் செல்வன் ஸ்ரீகிரிநாத், திருவானைக்காவலைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மகன்  செல்வன் ஹரிபிரசாத் மற்றும்  பொன்மலைப்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன்  செல்வன் சர்யா  ஆகிய மூன்று மாணவர்கள் 8.8.2013 அன்று கொள்ளிடம் ஆற்றில்  குளித்துக் கொண்டிருக்கும் போது  நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம்,  ஸ்ரீரங்கம் வட்டம், திம்மராயசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த  வெங்கடேசன் என்பவரின் மகன் பாவேந்தன் 16.8.2013  அன்று காவேரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் மஜரா மஞ்சக்கோரை கிராமம் அருகே 18.8.2013 அன்று காவேரி ஆற்றில் குளித்த பெங்களூருவைச் சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் சுதிர்கிருஷ்ணன்,  அய்யர்மலையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் பார்த்திபன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் சுகுமார் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

தஞ்சாவூர் மாவட்டம், சரியனார்கோவில் அருகே 18.8.2013 அன்று காவேரி ஆற்றில் குளித்த  திருவிடைமருதூர் வட்டம், திருமங்கலக்குடி கிராமத்தைச் சேர்ந்த  குமார் என்பவரின் மகன் விக்னேஷ் என்கிற விக்னேஷ்வரன் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கூறைநாடு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சபரிநாதன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து  நான்  மிகவும்  துயரம் அடைந்தேன். 

இந்த துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்