முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள்: மலர் தூவி மரியாதை

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.17 - எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா சார்பாக அமைச்சர்கள் - எம்.பி. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இது குறித்து அ.தி.முக. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் 95-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை (16.9.2013 - திங்கட்கிழமை), சென்னை கிண்டியில் அமைந்துள்ள எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் சார்பாக, கழக தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சருமான பி. பழனியப்பன், கிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான கே.பி. முனுசாமி, காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகச் செயலாளரும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், எம்.பி., தென் சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தமிழ் நாடு பஞ்சாலைக் கழகத் தலைவருமான விருகை வி.என். ரவி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டனர். 

கழகப் பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்