எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.12 - 1.76 லட்சம் கோடி ஊழல் செய்த கருணாநிதியின் குடும்பம், மீண்டும் அதிகாரத்தை அடைந்தால், இந்த நாட்டை இனி விலை கூவி விற்றுவிட மாட்டார்களா என்று எழுத்தாளர் ஞாநிக்கு அ.தி.மு.க. கொள்கை பரப்பு இணை செயலாளர் பழ.கருப்பையா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பழ.கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கருணாநிதிக்கே இல்லாத கவலை ஞாநிக்கு என்ன வந்தது?
எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குள்ள சிக்கல் வாரா வாரம் எதையாவது எழுதியாக வேண்டிய கட்டாயம்!
இந்த வாரம் ஒரு வாரப் பத்திரிகையில் ஸ்டாலின் முதலமைச்சராவதைக் கற்பனை செய்து பார்த்திருக்கிறார் ஞாநி! கத்தரிக்காய் விற்பவன்கூட ஒரு முதல்வராக வருவதாகக் கற்பனை செய்து சில பக்கங்கள் நிரப்ப விரும்பும் எழுத்தாளர்களை யாரும் மறிக்க முடியாது. ஆனால் அந்தக் கற்பனை நியாயப்படுத்தப்பட வேண்டாமா?
அலைக்கற்றை ஊழல் போன்ற, ஓர் இந்தியக் குடிமகனின் கற்பனைக்கெட்டாத அளவுக்கு 1.76 லட்சம் கோடி ஊழல் செய்த கருணாநிதியின் குடும்பம் மீண்டும் அதிகாரத்தை அடைந்தால், இந்த நாட்டை இனி விலை கூவி விற்றுவிட மாட்டார்களா? நினைக்கவே நெஞ்சு பதறும் இந்தக் கொடுமை மீண்டும் மக்களுடைய அறியாமையால்கூட பீடம் ஏறிவிடக்கூடாது என்று எச்சரிக்க வேண்டிய ஓர் எழுத்தாளன் அப்படி ஓர் ஊழல் நடந்ததாகவே கண்டுகொள்ளவில்லை என்றால் அந்த எழுத்தால் யாருக்கு என்ன பயன்?
ஆட்சி என்பது சிவப்பு விளக்குக் கார்களின் பவனி அல்ல! அது மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு!
கடந்த ஆட்சிக்காலம் முழுவதும் நாடு பல மணி நேரம் இருளில் மூழ்கியது. அம்மாவின் ஆட்சிக் காலத்தில் உபரி மின்சாரம் பக்கத்து மாநிலங்களுக்கு விற்கப்பட்டது!
புதிய தேவைப் பெருக்கத்தின் விளைவாக இந்த மின்வெட்டு என்றால் புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி மின்வெட்டை ஈடுசெய்ய மூன்றரையிலிருந்து நான்காண்டுகள் போதும். ஐந்தாண்டுகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் மின்வெட்டு சென்னையையும் சேர்த்துக் கவ்விக் கொண்டதுதானே கண்ட பலன்!
உற்பத்தியைப் பெருக்காமல் புதிய கிராமங்களுக்கு கருணாநிதி அந்தக் காலத்தில் மின்சாரம் வழங்கியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டபோது, கம்பி நீட்டுகிறார் கருணாநிதி என்று காமராசர் கேலி செய்தார்! கருணாநிதியின் ஆட்சித் திறன் அன்றும் இன்றும் இது தான்!
அழகிரியை, ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொண்டு ஒரு மாநில அமைச்சராகப் பணியாற்றச் சொல்லுங்கள் என்று கருணாநிதிக்கு யோசனை சொல்கிறார் ஞாநி!
தா. கிருட்டிணன் தன்னைத் தானே வெட்டிக்கொண்டு செத்தார் என்பதும், மதுரை செய்தி அலுவலகத்தில் மூன்று பேர் தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு செத்தார்கள் என்பதும் ஞாநியின் கருத்துப்போலும்!
இவ்வளவு பெரிய பாதகச் செயலைச் செய்தவர்கள் அரசியலில் இருக்கலாமா என்று கேட்க வேண்டிய ஞாநி, அழகிரி ஸ்டாலினின் தலைமையை ஏற்காவிட்டால் குடிமுழுகிப் போய்விடும் என்று கசிந்துருகுகிறார்! அந்தக் குடி ஒன்றிணைந்து பணியாற்றி மீதிக் கொள்ளையை அடிக்க வேண்டுமானால் அழகிரி, ஸ்டாலினின் தலைமையை ஏற்பது இன்றியமையாதது என்று கருணாநிதிகூடச் சொல்லவில்லை. ஞானி சொல்கிறார்! கருணாநிதிக்கே இல்லாத கவலை ஞானிக்கு!
2006ல் அம்மாவின் ஆட்சி இறுதிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 11.89 விழுக்காடு. 2011ல் கருணாநிதி காலத்தில் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 4.49 விழுக்காடு. நாட்டின் வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காகச் சரிந்துவிட்டது. ஜார்க்கண்டிற்கும் சத்தீஸ்கருக்கும் கீழே தமிழ்நாட்டைக் கொண்டு போய்விட்ட தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு யோசனை சொல்லும் எழுத்து தமிழ்நாட்டின் நலனில் அக்கறை உடைய எழுத்தாக இருக்க முடியுமா?
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் மழைர் சேமிப்பு உடனடி இன்றியமையாப் பணி என்று உணர்ந்த நிலையில் முதலமைச்சர் அம்மா மக்களை நெருக்கி அதை நடைமுறைப்படுத்தி அடி ஊற்றைப் பெருக்கச் செய்யவில்லையா? தான் செயல்படுவது மட்டுமல்ல; மக்களையும் செயல்படச் செய்பவர்தான் நல்ல தலைவர்!
தனியார் பள்ளிகளின் கட்டணத்தைச் சீர்படுத்த எண்ணிய கருணாநிதி அரசு குழு மேல் குழுவாகப் போட்டதுதான் கண்ட பலன்! இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க முடிந்ததா? மாணவர்களின் துயரத்தைப் போக்க முடிந்ததா? பராசக்திக்கு வசனம் எழுதுவது வேறு, ஆட்சித் திறன் என்பது வேறு!
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு கர்நாடகத்திலிருந்து பணம் வருத்தி தூதுவர்கள் மூலம் கொடுத்து, மீதி யானைகளையும், மீதி அதிகாரிகளையும் கொல்வதற்கு வழிவகுத்துக் கொடுத்த பரிவில்லாக் கோழை கருணாநிதி. அவனைச் சுட்டுக்கொன்று சந்தனக் காடுகளையும், யானைகளையும் காத்த வீராங்கனை அம்மா! எது ஆட்சித் திறன்? சொல்ல வேண்டாமா ஞாநி?
ஜெயலலிதா நாட்டுப் பணியாற்றுகிறவர்கள்; அவர்களின் காரியங்களைப் பார்க்க ஒரு நம்பிக்கையான ஆள் வேண்டும். ஜெயலலிதாவை எந்த நேரமும் நெருங்கி நல்லது கெட்டதை அறிந்து செயல்பட வேண்டும். ஜெயலலிதா ஒரு பெண். தன்னந்தனியாக வசிப்பவர்கள். அவர்களை எந்த நேரத்திலும் நெருங்கிச் செயல்படவும், துணையாக உடனிருக்கவும் இன்னொரு பெண்ணால்தான் இயலும். அந்தத் தேவையை நிறைவு செய்கின்ற ஊழியராக, தோழியாக, உடன்பிறவாச் சகோதரியாக 27 ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்கள் சசிகலா!
நேற்றுவரை கனிமொழியும் ஆ.ராசாவும் வேறோ? நான் வேறோ? என்று பாட்டுப் பாடினார்கள். இன்று நீதிமன்ற நெருக்கடி வந்துவிட்டது என்றவுடன் யாரோ? நான் யாரோ? என்று அறுத்துக் கொண்டு விட்டார்கள்! இதுதான் கோபாலபுரத்துப் பண்பாடு.
மெல்லுவதற்கு எதுவும் இல்லாதபோது சசிகலாவை இழுத்துவைத்துப் பேசுவது சில எழுத்தாளர்களின் இயல்பு!
வாசந்தி, ஜெயலலிதாவைப்பற்றி எழுதி இருந்த நூலுக்கு ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதை, சகிப்பு மனப்பான்மை அற்ற தன்மை என்கிறார் ஞாநி!
ஜான்சனோடு பாஸ்வெல் இரண்டறக் கலந்து அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அம்மாவோடு வாசந்தி பழகியவருமில்லை; அவரை அறிந்தவருமில்லை!
ஜெயலலிதாவின் தனி வாழ்க்கை குறித்த செய்திகளை வாசந்தி அறிந்திருக்க நியாயமில்லை. ஙீஜெயலலிதாவிடம் கேட்டறிந்து எழுதியிருக்க வேண்டும் அல்லது தன்னிடமிருந்த செய்திகளை ஜெயலலிதாவிடம் சரிபார்த்துக் கொண்டிருக்க வேண்டும்! அதுதான் எழுத்து தருமம்!
புத்தகத்தில் சூடேற்றுவதற்காகத் தாறுமாறான செய்திகளை உண்மைபோல் சொல்ல முற்பட்டால், அந்தப் புத்தகத்தின் பிறப்பைத் தடுத்து நிறுத்துவது அறிவுலகின் கடமை!
ஈடுஙூஙூடீடூசிக்கும் உண்மைத் திரிபுக்கும் வேறுபாடு தெரியாமல் வாசந்திக்குப் பரிந்து நிற்கிறார் ஞாநி! வாசந்தியின் எழுத்து உண்மைத் திரிபு! ஈழத்தைச் சுடுகாடாக்கத் துணை நின்ற கருணாநிதி ஒரு தமிழினத் துரோகி அவருடைய ஆட்சி தொடர்வதை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டு எழுதுவதைப் படிக்கும்போதுகூட அடிவயிற்றில் குமட்டுகிறது!
கருணாநிதியுடன் நாளும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, அவரைப் புகழ்கிற விழாக்களுக்கெல்லாம் சென்று முதல் வரிசையில் அமர்ந்து கைதட்டிவிட்டு, ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!
இதுதான் நாட்டின் மனநிலை!புரிகிறதா ஞாநி?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.